செய்திகள்

விழுப்புரத்தில் ஓ.பன்னீர்செல்வம் 22-ந் தேதி பேசுகிறார்

Published On 2017-05-19 05:52 GMT   |   Update On 2017-05-19 05:52 GMT
வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசுகிறார்.

சென்னை:

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள், செயல்வீரர்கள்-வீராங்கனைகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கெனவே காஞ்சீபுரம் கிழக்கு, சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசுகிறார்.

ஜூன் 1-ந் தேதி நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அ‌ஷரித் திடலில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார்.

Tags:    

Similar News