செய்திகள்

கேரளாவில் சிக்கிய 6 பேரை கொடநாடுக்கு அழைத்து வந்து விசாரணை

Published On 2017-04-29 08:19 GMT   |   Update On 2017-04-29 08:19 GMT
கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் கேரளாவில் சிக்கிய 6 பேரை போலீசார் எஸ்டேட்டுக்கு அழைத்து சென்று, காவலாளி ஓம் பகதூரை தாக்கி கொலை செய்தது? மற்றும் பங்களாவுக்கு நுழைந்தது ஆகியவை பற்றி விசாரித்தனர்.
கோத்தகிரி:

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ந்தேதி காவலாளி ஓம்பகதூரை மர்ம கும்பலால் படுகொலை செய்தது

மேலும் மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரையும் கும்பல் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதுபற்றி தெரியவந்ததும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த கொலை - கொள்ளை சம்பவம் குறித்து துப்புதுலக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது.

மேலும் கிருஷ்ணபகதூர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொலை யாளியின் உருவப்படத்தை வரைந்து வெளியிட்டனர்.

இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையிலான போலீசார் கேரள மாநிலம் திருச்சூருக்கு விரைந்தனர். அங்கு இந்த கொலை தொடர்பாக திருச்சூரை சேர்ந்த சந்தோஷ், சதீசன், சிபு ஆகிய 3 பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் இவர்கள் கொடநாடு கொலை சம்பவத்தில் கூலிப்படையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மலப்புரத்தில் 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் 6 பேரையும் ஊட்டிக்கு நேற்று நள்ளிரவு போலீசார் அழைத்து வந்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று மதியம் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையிலான போலீசார், பிடிபட்ட 6 பேரையும் கொடநாடு எஸ்டேட்டுக்கு அழைத்து சென்றனர்.

அங்கு காவலாளி ஓம் பகதூரை தாக்கி கொலை செய்தது? மற்றும் பங்களாவுக்கு நுழைந்தது ஆகியவை பற்றி விசாரித்தனர். மேலும் நடந்த சம்பவத்தை நடித்து காட்டவும் போலீசார் கூறினர்.

இதை போலீசார் வீடியோ பதிவு செய்து கொண்டனர்.

Tags:    

Similar News