செய்திகள்

பெரம்பலூர் அருகே மெக்கானிக் கழுத்தை அறுத்து படுகொலை

Published On 2017-04-28 10:34 GMT   |   Update On 2017-04-28 10:34 GMT
பெரம்பலூர் அருகே மெக்கானிக் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தை அடுத்த மருவத்தூர் அருகே அய்யானூர் - கல்பாடி சாலையில் நடராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த வயலில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக இன்று காலை அப்பகுதி மக்கள் சென்றனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அருகில் உடைந்த நிலையில் பீர் பாட்டில்கள் கிடந்தன.

இது குறித்து அவர்கள் மருவத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் எஸ்.பி. மற்றும் மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சித்ரா ஆகியோர் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீவிர விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தது பெரம்பலூர் அரணாரை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜா (35) மெக்கானிக் என்பது தெரியவந்தது.

கொலையுண்ட ராஜா பெரம்பர் மற்றும் அரணாரையில் மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார். இந் நிலையில் தான் அவர் பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யபட்டு உள்ளார்.

எனவே ராஜா தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்திருக்கலாம் எனவும், அப்போது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்? எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் இந்த கொலையில் தொடர்புடைய நபர்கள் யார் என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மருவத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News