செய்திகள்
கூவத்தூர் விடுதியில் தங்கி இருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலக்கம்
கூவத்தூர் விடுதியில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கேட்டு கலக்கமும், பீதியும் அடைந்துள்ளனர்.
சசிகலாவை ஆதரிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கி இருந்தனர். அவர்களுடன் நேற்று சசிகலாவும் தங்கி இருந்தார். இன்று காலை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தீர்ப்பை கேட்டு எம்.எல்.ஏ.க்கள் கலக்கமும், பீதியும் அடைந்துள்ளனர். ஏற்கனவே சசிகலாவை ஆதரித்ததால் தொகுதி மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகி இருந்தனர்.
தற்போது தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக அமைந்திருப்பதால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போய் இருக்கிறார்கள்.
கூவத்தூரில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பை கேட்டதும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக இருந்த கூவத்தூர் சொகுசு விடுதி இன்று களையிழந்து காணப்பட்டது. போலீசார் மட்டும் குவிக்கப்பட்டு இருந்தனர்.