செய்திகள்

சேலம்- நாமக்கல் மாவட்டத்தில் 13 வக்கீல்கள் சஸ்பெண்டு

Published On 2016-07-25 08:58 GMT   |   Update On 2016-07-25 08:58 GMT
சேலம் - நாமக்கல் மாவட்டத்தில் 13 வக்கீல்கள் சஸ்பெண்டு உள்ளனர்.
சேலம்:

சேலத்தில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.பொன்னுசாமி, செயலாளர் கே.ஆர்.ஆர்.அய்யப்பமணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

நாமக்கல்லில் வக்கீல்கள் ராமலிங்கம், ரமேஷ், மாதேஸ்வரன், மகேந்திரன், கிருஷ்ணன், முத்துக்குமார், ராஜூ, சேகர், பிரபாகரன், ஆறுமுகம், காமராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர்.

தர்மபுரி-கிருஷ்ணகிரி தர்மபுரியில் எந்த வக்கீல்களும் நீக்கப்படவில்லை என்று தர்மபுரி மாவட்ட பார் கவுன்சில் தலைவர் பிரகாசம் கூறினார்.

கிருஷ்ணகிரியில் எந்த வக்கீலும் சஸ்பெண்டு செய்யப்படவில்லை.

Similar News