செய்திகள்
ஷஃபாலி வர்மா

15 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கி இந்திய வீராங்கனை சாதனை

Published On 2019-09-25 09:40 GMT   |   Update On 2019-09-25 09:40 GMT
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டி20-யில் களமிறங்கிய ஷஃபாலி வர்மா, இளம் வயதில் அறிமுகமான இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று சூரத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஷஃபாலி வர்மா இடம் பிடித்திருந்தார்.

ஷஃபாலி வர்மாவுக்கு 15 வயதே ஆகிறது. இதன்மூலம் இளம் வயதில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 2-வது இளம் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.



தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய ஷஃபாலி வர்மான நான்கு பந்துகளை எதிர்கொண்டு ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
Tags:    

Similar News