செய்திகள்
ஆண்டிகுவா டெஸ்டில் அடித்த 10-வது சதம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது: ரகானே
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆண்டிகுவா டெஸ்டில் அடித்த சதம், எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று ரகானே தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான ரகானே 2-வது இன்னிங்சில் சதம் அடித்தார். இது அவரின் 10-வது சதமாகும். முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த அவர், ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்நிலையில் ஆண்டிகுவா டெஸ்டில் அடித்த சதம் எனக்கு முக்கியத்தும் வாய்ந்தது என்று ரகானே தெரிவித்துள்ளார்.
10-வது சதத்தை அடிக்க எனக்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் முன் தயாராகுவது மிகமிக முக்கியமானது. கடந்த இரண்டு வருடம் இதைத்தான் செய்து வந்தேன். ஆகவே, 10-வது சதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.
இந்நிலையில் ஆண்டிகுவா டெஸ்டில் அடித்த சதம் எனக்கு முக்கியத்தும் வாய்ந்தது என்று ரகானே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘ஆண்டிகுவா டெஸ்டில் அடித்த என்னுடைய 10-வது சதம் சிறப்பு வாய்ந்தது என்று நினைக்கிறேன். நான் ஒரு குறிப்பிட்ட சைகையுடன் இந்த சந்தோசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. சந்தோசத்தை வெளிப்படுத்துவது தானகவே வரும். அப்போது சற்று எமோசனல் இருந்தது.
10-வது சதத்தை அடிக்க எனக்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் முன் தயாராகுவது மிகமிக முக்கியமானது. கடந்த இரண்டு வருடம் இதைத்தான் செய்து வந்தேன். ஆகவே, 10-வது சதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.