search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvWI"

    • 15.3 ஓவரில் 165 ரன்கள் குவித்தனர்
    • இந்தியா 17 ஓவரில் 179 ரன்களை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று புளோரிடாவில் நடைபெற்ற 4-வது போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான சுப்மான் கில்- ஜெய்ஸ்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    15.3 ஓவரில் இந்த ஜோடி 165 ரன்கள் குவித்தது. ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கு மேல் அடித்தனர். சுப்மான் கில் 47 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார். ஜெய்ஸ்வால் 51 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி 179 இலக்கை 17 ஓவரிலேயே எட்டியது. முதல் மூன்று போட்டிகளில் சொதப்பிய சுப்மான் கில் அதிரடி வாணவேடிக்கை நிகழ்த்தினார்.

    இந்த நிலையில் அப்போதைய சச்சின் டெண்டுல்கர்- சவுரவ் கங்குலி ஜோடியை போன்று இந்த ஜோடியால் ஆக முடியும் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

    இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு வீரர்களும் சமமான திறனைப் பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து விளையாடிய வகையில், ஒருவருக்கொருவர் பேட்டிங் செய்ய முடியும். அதற்கான வழியை அவர்கள் தேடுவது அவசியம். அவ்வாறு செய்தால், இந்திய அணியின் அபாயகரமான தொடக்க வீரர்களாக பல ஆண்டுகள் நீடிப்பார்கள். அவர்கள் சச்சின் டெண்டுல்கர்- கங்குலி போன்று சிறந்த ஜோடியாக திகழ்வார்கள்.

    அவர்கள் ஆட்டத்தின் சில பிரச்சனைகளை அவர்கள் கண்டுபிடித்து, அதை சரியான முறையில் செய்தால், இந்தியாவுக்கு மிகப்பெரிய பலனாக அமையும்'' என்றார்.

    • பாண்ட்யா 89 டி20 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
    • இந்த பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் 95 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி தோல்வியை தழுவினாலும் கேப்டனான பாண்ட்யா டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்களில் பும்ராவுடன் இணைந்துள்ளார். பாண்ட்யா 89 டி20 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இந்த பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் 95 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும் புவனேஸ்வர் குமார் 90 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும் 3-வது இடத்தை பாண்ட்யா பிடித்துள்ளனர். 4-வது இடத்தில் தமிழக வீரர் அஸ்வின் (72) உள்ளார். பும்ரா 70 விக்கெட்டுகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

    • ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் போன்ற எத்தனையோ இளம் வீரர்கள் துருப்பு சீட்டுகளாக உள்ளனர்.
    • ஆசிய மற்றும் உலக கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்பது கணிப்பது மிகவும் கடினமானது.

    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17 வரை பாகிஸ்தான், இலங்கையில் நடக்கிறது.

    இந்தப் போட்டிகளில் இந்திய அணி நிலை குறித்து இலங்கை முன்னாள் பிரபல வேகப்பந்து வீரர் சமிந்தா வாஸ் கருத்து தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிகளில் விராட்கோலி, ரோகித் சர்மா ஆகியோரை மட்டும் இந்திய அணி நம்பி இருக்கவில்லை. பல இளம் வீரர்கள் அணியின் துருப்பு சீட்டுகளாக இருக்கிறார்கள். ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் போன்ற எத்தனையோ இளம் வீரர்கள் துருப்பு சீட்டுகளாக உள்ளனர்.

    ஜெய்ஷ்வால், சுப்மன்கில் போன்ற இளம் வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். இந்தியாவில் எத்தனையோ திறமைசாலிகள் உள்ளனர். எல்லோரும் போட்டி போடுகிறார்கள். பேட்டிங்கை பொறுத்தவரை இந்திய அணி எப்போதுமே விராட்கோலி, ரோகித் சர்மாவை சார்ந்து இருக்காது என்று நான் நினைக்கிறேன். மற்ற திறமையானவர்களும் இருக்கிறார்கள். கோலி, ரோகித் அபாரமாக செயல்பட்டால் பெரும்பாலும் இந்தியாவே வெற்றி பெறும்.

    பும்ரா உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். அவரது சேவை பெற இந்திய அணி விரும்புகிறது. காயத்தில் இருந்து குணமடைந்த அவர் மீண்டும் நல்ல நிலைக்கு வருவது எளிதல்ல. பும்ரா முழு உடல்தகுதி பெற்றால் உலக கோப்பையில் இந்தியாவுக்கு பலன் கிடைக்கும்.

    ஆசிய மற்றும் உலக கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்பது கணிப்பது மிகவும் கடினமானது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமநிலையாக இருக்கும் அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது. 50 ஓவர் போட்டிகள் அனைத்தும் 325 முதல் 350 ரன்களுக்கு செல்கிறது. எனவே எந்த அணி 320 முதல் 350 ரன்களை பெறுகிறதோ அவர்களால் வெற்றி பெற இயலும்.

    இவ்வாறு சமிந்தா வாஸ் கூறியுள்ளார்.

    • ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களம் இறங்குவார் என கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
    • பிளேயிங் லெவனில் 2 சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என இந்திய அணி கேப்டன் கூறினார்.

    டொமினிகா:

    இந்திய அணி 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் இன்று தொடங்குகிறது.

    இந்திய அணியில் புஜாராவின் இடத்தில் யார் பிளேயிங் லெவனில் இடம் பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

    இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் அறிமுக வீரராகவும், தொடக்க வீரராகவும் களம் இறங்குவார் என கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இந்திய அணியின் 3-வது வரிசை வீரராக ஷுப்மன் கில் களமிறங்குவார். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    • டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் போன்ற ஒருவரை சேர்க்க தேர்வாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.
    • ஹர்திக் பாண்ட்யா ஒரு புதிய தோற்றம் கொண்ட டி20 அணிக்கு தலைமை தாங்குவார்.

    இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளை ரோகித் சர்மா வழிநடத்துவார். டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்பார்.

    டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித்துக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும், வேறொருவர் தற்காலிகமாக பொறுப்பேற்கலாம் என்றும் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ரோகித் சர்மா இந்த சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். மேலும் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயத்தில் இருப்பதால் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. எனவே, புஜாரா தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள உள்ளார்.

    புஜாரா இருந்தபோதிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு சர்பராஸ் கான் போன்ற ஒருவரை சேர்க்க தேர்வாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    டி20 போட்டிகளில் ரோகித் மற்றும் விராட் கோலிக்கு இடம் இருக்காது. ஹர்திக் பாண்டியா ஒரு புதிய தோற்றம் கொண்ட டி20 அணிக்கு தலைமை தாங்குவார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் இதில் இடம் பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லாடர்ஹில்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி லாடர்ஹில் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது. ரிஷப் பண்ட் 44 ரன்னும், கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்னும், சஞ்சு சாம்சன் 30 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவரில் 132 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பூரன் மற்றும் பாவல் ஆகியோர் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், நேற்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்கள் எடுத்திருந்தபோது சர்வதேச அரங்கில் 16,000 ரன்களைக் கடந்த 7வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.

    அவர் டெஸ்டில் 3,137 ரன்னும், ஒருநாள் போட்டியில் 9,376 ரன்னும், டி20 போட்டியில் 3,487 ரன்னும் எடுத்துள்ளார்.

    சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விராட் கோலி, வீரேந்திர சேவாக் மற்றும் எம்,எஸ்,டோனி ஆகியோர் 16,000 ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜடேஜா ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    • ஒருநாள் தொடருக்குப் பிறகு ஜூலை 29-ம் தேதி தொடங்கும் டி20 தொடரில் ஜடேஜா விளையாடலாம்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. துணைக் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

    இன்று முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில் ஜடேஜா காயம் காரணமாக விலகி உள்ளார். இடது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஜடேஜா முதல் ஒருநாள் போட்டி மட்டுமின்றி ஒருநாள் தொடரில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஜடேஜா மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவரது காயம் எவ்வளவு தீவிரமானது என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.

    ஒருநாள் தொடருக்குப் பிறகு ஜூலை 29-ம் தேதி தொடங்கும் டி20 தொடரில் ஜடேஜா விளையாடலாம். இருப்பினும் மருத்துவக் குழு ஜடேஜா குறித்த அறிக்கையை அளிக்கும் போது மட்டுமே அது குறித்து கூற முடியும்.

    ஆஸ்திரேலியா தொடர் தொடங்கும் நிலையில் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது மிகவும் முக்கியமானது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ஷிகர் தவான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. ஒருநாள் போட்டியில் மிகப்பெரிய அளவில் ரன் குவிக்க திணறினார். அதேபோல் டி20 போட்டியிலும் திணறி வந்தார். நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடி 62 பந்தில் 92 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்தியா அடுத்து ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு முன் தவான் மீண்டும் பார்முக்கு வந்தது முக்கியமானது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘அணியின் கண்ணோட்டத்தில் முக்கியமான ஆஸ்திரேலியா தொடருக்கு முன் வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்கள் குவிப்பது முக்கியமானது. ஒருநாள் போட்டியில் சிறப்பாக போட்டிங் செய்தாலும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. முக்கியமான தொடருக்கு முன் அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் அதிக ரன்கள் குவித்ததால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.



    ரிஷப் பந்த் ஆடுகளம் இறங்கி ரன்கள் குவிக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளார். இது அவருக்கு சரியான தருணமாக இருந்தது. முதல் ஆறு ஓவர்களுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்திருந்தோம். இதனால் சற்று நெருக்கடி ஏற்பட்டது. நெருக்கடியை தவான் மற்றும் ரிஷப் பந்த் சிறப்பாக எதிர்கொண்டார்கள்.

    எப்போதுமே இந்தியா வெளிநாடு சென்று விளையாடும்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது சவாலானதாகும். ஒவ்வொரு முறையில் அங்கு செல்லும்போது அணி, வீரர்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் பரிசோதனையாகும். ஆஸ்திரேலியா மாறுபட்ட பந்தை கொண்ட விளையாட்டு’’ என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடரை 3-0 எனக் கைப்பற்றிய இந்திய அணிக்கு சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 71 ரன்களிலும், சென்னையில் நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை 3-0 என இந்தியா ஒயிட்வாஷ் செய்தது.

    சிறப்பாக விளையாடி 3-0 எனக்கைப்பற்றிய இந்திய அணிக்கு ஓய்வில் இருக்கும் கேப்டன் விராட் கோலி மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
    டி20 அணியில் டோனி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கவலை தெரிவித்துள்ளார். #MSDhoni #RohitSharma
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. நேற்று சென்னையில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது.

    இந்த தொடரில் எம்எஸ் டோனி பங்கேற்கவில்லை. டி20 போட்டியில் இந்தியா அறிமுகமான காலத்தில் இருந்து விளையாடி வந்த டோனி முதன்முறையாக இந்திய அணியில் இடம்பெறவில்லை.



    நேற்றைய போட்டியில் கோப்பையை கைப்பற்றியதும் டோனி அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பு என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘இலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் தொடரிலும் பங்கேற்கவில்லை. எம்எஸ் டோனி இல்லாதது எந்தவொரு அணிக்கும் மிகப்பெரிய இழப்பு. அவர் அணியில் இருப்பது எனக்கு மட்டுமல்ல ஏராளமான வீரர்களுக்கு பூஸ்ட் ஆக இருக்கும். குறிப்பாக இளம் வீரர்களுக்கு’’ என்றார்.
    சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் டி20 போட்டிக்கான டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். போலீஸ் ஏட்டு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. #INDvWI
    சென்னை, நவ.11-

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் சில தினங்களுக்கு முன்பே விற்று தீர்ந்து விட்டன. இன்று நடைபெறும் போட்டிக்காக அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருவல்லிக்கேணி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மேரி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது வாலிபர் ஒருவர் மைதானத்துக்கு அருகில் வைத்து டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் மேரி மடக்கி பிடித்தார். அந்த வாலிபர் ரூ.1200 டிக்கெட்டை ரூ.2000-க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் இருந்து 3 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெங்களூரை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பது தெரிய வந்தது. சென்னை, ஐதராபாத் நகரங்களில் கடந்த 4 ஆண்டுகளாக சட்ட விரோதமாக கிரிக்கெட் டிக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது.

    பூக்கடை போக்குவரத்து போலீஸ்காரர் முத்து ஏற்பாட்டின் பேரில்தான் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக அப்துல் ரகுமான் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். போலீஸ்காரர் முத்து, இதற்கு முன் திருவல்லிக்கேணி துணை ஆணையரின் தனிப்படையில் பணியாற்றியவர் ஆவார்.



    போலீஸ்காரர் முத்து, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்று டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதற்காக திருவல்லிக்கேணி பகுதியில் லாட்ஜில் அறை எடுத்து ஆட்களை அவர் தங்க வைத்ததும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீஸ்காரர் முத்து மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்துல் ரகுமானை கைது செய்த போலீசார் முத்துவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை தேடிச்சென்றனர். ஆனால் அவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

    திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையிலான போலீசார் அவரை தேடிவருகிறார்கள்.
    சேப்பாக்கத்தில் டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். #INDvWI
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று 7 மணிக்கு நடக்கிறது. முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது போலவே இந்த ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றிபெறும் ஆர்வத்தில் ரோகித் தலைமையிலான இந்திய அணி இருக்கிறது.

    ஒயிட்வாஷ் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது. அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    கடந்த போட்டியில் ரோகித் சர்மா அதிரடியான சதத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைத்தார். இதேபோல் இன்றும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை ரசிகர்களை மகிழ்விப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    20 ஒவரில் 4 செஞ்சூரி அடித்து சாதனை படைத்த ரோகித் சர்மா அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை சேப்பாக்கத்தில் படைப்பாரா? என்று எதிர்நோக்கப்படுகிறது. அதற்கு அவருக்கு இன்னும் 69 ரன்னே தேவை. ரோகித் சர்மா 2203 ரன் (79 இன்னிங்ஸ்) எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 2271 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இன்று இந்த சாதனையை முறியடிக்காவிட்டால் அவர் ஆஸ்திரேலிய பயணம் வரை காத்திருக்க வேண்டும்.

    ரோகித் சர்மா 74 ரன் எடுத்தால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை பெறுவார். தற்போது அவர் 330 ரன்னுடன் 4-வது இடத்தில் உள்ளார். பாபர் ஆசம் (403 ரன்), அலெக்ஸ் ஹேல்ஸ் (384), தில்சன் (346) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.



    முழுமையாக வென்றால் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை 2 முறை ஒயிட்வாஷ் செய்த இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார். சர்வதேச அளவில் 3-வது கேப்டன் என்ற பெருமையை பெறுவார். சர்பிராஸ் அகமது (பாகிஸ்தான்), 5 முறையும், ஆஸ்கர்கான் (ஆப்கானிஸ்தான்) 3 முறையும் ஒயிட்வாஷ் செய்துள்ளனர்.

    இந்திய அணி 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை ஏற்கனவே 2 முறை முழுமையாக கைப்பற்றியது. 2016-ல் ஆஸ்திரேலியாவையும், 2017-ல் இலங்கையையும் ஒயிட்வாஷ் செய்தது. தற்போது 3-வது முறையாக ஒயிட்வாஷ் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.
    ×