செய்திகள்
பிவி சிந்து கிதாம்பி ஸ்ரீகாந்த்

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து, ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2019-07-17 12:05 GMT   |   Update On 2019-07-17 12:05 GMT
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து அயா ஒஹோரியை எதிர்கொண்டார். முதல் செட்டை ஒஹோரி 21-11 எனக் கைப்பற்றினா். சுதாரித்துக் கொண்ட ஐந்தாம் நிலை வீராங்கனையான பிவி சிந்து 2-வது சுற்றை 21-15 எனவும், 3-வது சுற்றை 21-15 எனவும் கைப்பற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் கென்ட்டா நிஷிமோட்டோவை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 21-14, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பி சாய் ப்ரனீத் ஹாங் காங் வீரரிடம் தோல்வியடைந்தார்.
Tags:    

Similar News