செய்திகள்

கரெக்டா ப்ளான் பண்ணி அடிச்சோம்.. ஜெயிச்சோம்-மலிங்கா சுவாரஸ்ய பேட்டி

Published On 2019-06-22 03:27 GMT   |   Update On 2019-06-22 03:27 GMT
இலங்கை வீரர் மலிங்கா உலக கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சரியாக திட்டமிட்டு விளையாடினோம். வெற்றிப் பெற்றுவிட்டோம் என சுவாரஸ்யமாக பேட்டி அளித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இதன் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோதின.

தொடக்கத்தில் சற்று மெதுவாக விளையாடிய இலங்கை அணி, இறுதியில் இங்கிலாந்து அணிக்கு ஷாக் கொடுத்தது. இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.



இலங்கை தரப்பில் மலிங்கா 4 விக்கெட் எடுத்து அசத்தினார். இதனால் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இது குறித்து மலிங்கா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இங்கிலாந்து பலம் மிக்க அணி என நன்றாக தெரியும். இறுதி கட்டத்தில் ஸ்டோக்ஸ் எப்படி விளையாடுவார் என்பதும் தெரியும். ஐபிஎல், டி20 போட்டிகளில் அவரை கவனித்துள்ளோம்.

இருப்பினும் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. சரியாக ப்ளான் செய்து பந்தை வீசினோம். அவருக்கு அதிகமாக ரன்களை கொடுக்காமல் அழுத்தத்தை ஏற்படுத்தினோம்.

எங்கள் ப்ளானை சரியாக செய்து ஜெயித்தோம். பந்துகளை பல்வேறு விதமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினோம். இறுதியில் போட்டி எங்களுக்கு சாதமாகிவிட்டது. இப்போது இந்த வெற்றி எங்கள் அணி மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.












Tags:    

Similar News