செய்திகள்

ஒரு ஹாய், ஹலோ கூட இல்ல: தமிழ் ரசிகர்களை செல்லமாக கடிந்து கொண்ட ஹர்பஜன் சிங்

Published On 2019-06-20 08:31 GMT   |   Update On 2019-06-20 08:31 GMT
தமிழில் ட்வீட் போடும்போது ஆசையா பேசுறீங்க, மத்த நேரத்துல ஒரு ஹாய், ஹலோ கூட இல்லை என சிஎஸ்கே தமிழ் ரசிகர்களிடம் விளையாட்டாக கேட்டுள்ளார் ஹர்பஜன் சிங்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். ஐபிஎல் தொடரில் இவர் கடந்த இரண்டு சீசனில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சிஎஸ்கே ரசிர்களை கவர்வதற்காக ஐபிஎல் தொடரின்போது அடிக்கடி தமிழில் ட்வீட் செய்து அசத்தினார்.

அவரது ட்வீட்டுக்கு ரசிகர்கள் அதிக அளவில் லைக் செய்ததுடன், பதிலும் அனுப்பினர். ஆனால் தொடர் முடிந்த பின் ஹர்பஜன் சிங்குக்கும் ரசிகர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமானது.



இந்நிலையில் இன்று தமிழில் ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார். அதில் ‘‘எல்லாருக்கும் வணக்கம்!! என்னோட தமிழ் சொந்தங்கள் எல்லாம் எப்பிடி இருக்கீங்க ஏன் நீங்க எல்லாம் நான் Tamil Tweet போடும் போது ஆசையா பேசுறீங்க. மத்த நேரத்துல ஒரு ஹாய், ஹலோ கூட இல்ல.நான் எப்பிடி இருக்கேன்னு கேட்ககூடாதா சும்மா வெளயாடுனேன் எல்லாம் நல்லா இருக்கீங்களா. தமிழ் மக்களால் நான்’’ என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News