செய்திகள்

ஹர்திக் பாண்டியாவுடன் கைகுலுக்காததற்கு இதுதான் காரணம்: ஹர்ஷா போக்லே விளக்கம்

Published On 2019-05-07 10:26 GMT   |   Update On 2019-05-07 10:26 GMT
ஆட்ட நாயகன் விருதை அறிவிக்கும்போது ஹர்திக் பாண்டியாவுடன் கைகுலுக்காததற்கு இதுதான் காரணம் என்று ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார். #HardikPandya
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 133 ரன்னில் சுருண்டது. ஹர்திக் பாண்டியா 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இதனால் ஆட்டநாயகன் விருதை பெற்றார். போட்டி முடிந்த பின்னர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைசிறந்த கிரிக்கெட் வர்ணனையாளரில் ஒருவரான ஹர்ஷா போக்லே விருதை வழங்கும் விழாவை தொகுத்து வழங்கினார். அப்போது ஆட்ட நாயகன் விருதை பெற்ற ஹர்திக் பாண்டியா அவருடன் கைகுலுக்க கையை நீட்டினார். ஆனால் ஹர்ஷா கைகுலுக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டார்.



இதை பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது ஆதங்களை தெரிவித்தனர். இந்நிலையில் கேமராவுக்காக திரும்பியதால் கைகுலுக்க முடியாமல் போனது என்று உடனடியாக டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்ஷா போக்லோ தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘போட்டி முடிந்த பின்னர் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியாவுடன் சிறப்பாக பேசிக்கொண்டிருந்தேன். அவருடனான பேச்சு எளிதாக சென்றது.

அவர் கைகுலுக்க முயற்சி செய்யும்போது, நான் கேமராவுக்காக திரும்பிவிட்டேன். இனிமேல் அதுபோன்று நடக்காது என்று நம்புகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News