செய்திகள்
ஐபிஎல் 2019 சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி பலப்பரீட்சை
ஐபிஎல் 2019-க்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 23-ந்தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #IPL2019
ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 2019 சீசன் மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின் ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடப்படும். போட்டிகள் அனைத்தும் இந்தியாவில்தான் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் முதல் இரண்டு வாரத்திற்கான போட்டி அட்டவணை இன்று மதியம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் முதல் போட்டி மார்ச் 23-ந்தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் முதல் இரண்டு வாரத்திற்கான போட்டி அட்டவணை இன்று மதியம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் முதல் போட்டி மார்ச் 23-ந்தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.