செய்திகள்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 235 ரன்னில் சுருண்டது

Published On 2019-02-13 14:10 GMT   |   Update On 2019-02-13 14:10 GMT
இலங்கையின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 235 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SAvSL
இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் மார்கிராம், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டீன் எல்கர் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

அடுத்து வந்த அம்லா 3 ரன்னில வெளியேறினார். மார்கிராம் 11 ரன்னில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 17 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு பவுமா உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.



இருந்தாலும் டு பிளிசிஸ் 35 ரன்னிலும், பவுமா 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைநிலை வீரர்களை வைத்துக் கொண்டு டி காக் 80 ரன்கள் சேர்க்க தென்ஆப்பிரிக்கா 59.4 ஓவரில் 235 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், ரஜிதா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News