செய்திகள்
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி: சவுராஷ்டிராவிற்கு எதிராக விதர்பா திணறல்: முதல் நாளில் 200/7
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சவுராஷ்டிராவிற்கு எதிராக விதர்பா முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. #RanjiTrophyFinal
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் விதர்பா - சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற விதர்பா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பாசல், சஞ்சய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சஞ்சய் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். பாசல் 16 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.
அதன்பின் வந்த அனுபவ வீரரான வாசிம் ஜாபர் 23 ரன்னில் வெளியேறினார். இதனால் விதர்பா அணி திணற ஆரம்பித்தது. விக்கெட் கீப்பர் வாட்கர் 45 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 150-ஐ தாண்ட உதவி செய்தார். முதல்நாள் ஆட்ட முடிவில் கார்னிவர் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுக்க விதர்பா 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் அடித்துள்ளது.
டாஸ் வென்ற விதர்பா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பாசல், சஞ்சய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சஞ்சய் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். பாசல் 16 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.
அதன்பின் வந்த அனுபவ வீரரான வாசிம் ஜாபர் 23 ரன்னில் வெளியேறினார். இதனால் விதர்பா அணி திணற ஆரம்பித்தது. விக்கெட் கீப்பர் வாட்கர் 45 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 150-ஐ தாண்ட உதவி செய்தார். முதல்நாள் ஆட்ட முடிவில் கார்னிவர் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுக்க விதர்பா 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் அடித்துள்ளது.