செய்திகள்

ரஞ்சி டிராபியில் ஹர்திக் பாண்டியா: விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்கிறார்

Published On 2018-12-14 08:38 GMT   |   Update On 2018-12-14 08:38 GMT
ஆசிய கோப்பை தொடரின்போது காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா, தற்போது குணமடைந்து ரஞ்சி டிராபியில் களம் இறங்கியுள்ளார். #HardikPandya
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா. ஆசிய கோப்பை போட்டியின்போது காயம் அடைந்தார். இதனால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ஹர்த்திக் பாண்ட்யா ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடுகிறார்.



இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘எனது உடல் தகுதியை பரிசோதித்துக் கொள்ள ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறேன். எவ்வளவு விரைவில் அணியில் இடம் பெறமுடியுமோ அவ்வளவு விரைவில் அணிக்கு தேர்வாவேன்’’ என்றார்.
Tags:    

Similar News