செய்திகள்

ஐஎஸ்எல் கால்பந்து - சென்னையின் எப்சி - கோவா அணிகள் நாளை மோதல்

Published On 2018-10-05 10:41 GMT   |   Update On 2018-10-05 10:41 GMT
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நாளை சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #ISL
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐஎஸ்எல்) போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் சென்னையின் எப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூருவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.

சென்னையின் எப்சி தனது 2-வது ஆட்டத்தில் நாளை கோவாவுடன் மோதுகிறது. இப்போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இதில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மெயில்சன் ஆல்வஸ் தலைமையிலான சென்னை அணியில் பெர்னாண்டஸ், ஆகஸ்டோ, ஜெஜெ, ஜெர்மன் பிரீத்சிங், நெல்சன், சபியா போன்ற வீரர்கள் உள்ளனர். கோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் கட்டுபாட்டில் பந்து அதிக நேரம் இருந்தது.



ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. பல கோல் வாய்ப்புகளை தவறவிட்டனர். இதனை சரி செய்ய வேண்டியது அவசியம்.
சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலத்த மழை பெய்தால் நாளைய போட்டி பாதிக்கப்பட கூடிய வாய்ப்பும் உள்ளது. கொச்சியில் இன்று இரவு நடக்கும் 7-வது ‘லீக்’ ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதுகின்றன.
Tags:    

Similar News