செய்திகள்

பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் பிஸ்வானத் தத் காலமானார்

Published On 2018-09-24 07:52 GMT   |   Update On 2018-09-24 07:52 GMT
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான பிஸ்வானத் தத் தனது 92 வயதில் காலமானார். #BCCI #BiswanathDutt
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் பிஸ்வானத் தத். மறைந்த ஜக்மோகன் டால்மியாவின் ஆலோசகராக இருந்த இவர், இன்று நுரையீரல் தொற்று நோய் காரணமாக காலமானார். இவருக்கு வயது 92. 1989-ம் ஆண்டு பிசிசிஐ-யின் தலைவர் பதவியாக இருந்தார். 1982 முதல் 11988-ம் ஆண்டு வரை துணைத் தலைவராக இருந்தார்.

இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகன் சுப்ரதா தத்தா ஆல் இந்தியா கால்பந்து பெடரேசனின் துணைத் தலைவராக உள்ளார்.
Tags:    

Similar News