செய்திகள்

கேப்டன் பதவியில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்படுகிறார்- கவாஸ்கர் பாராட்டு

Published On 2018-09-23 08:29 GMT   |   Update On 2018-09-23 08:29 GMT
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் மற்றும் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்படுகிறார் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #RohitSharma
இந்திய அணி முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:-

கேப்டன் மற்றும் பேட்டிங் பணியில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்படுகிறார். அவர் ஐபிஎல்-லில் அபாரமாக செயல்பட்டு மும்பை இந்தியன்ஸ்க்கு கோப்பையை பெற்றுக்கொடுத்தார். இதேபோல தற்போது கேப்டன் பதவியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். பேட்டிங்கில் பொறுப்பாக விளையாடி தன்னை சிறந்தவர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



ஒன்பது 20 ஓவர் போட்டியில் அவர் கேப்டனாக பணியாற்றி 8-ல் வெற்றி பெற்று கொடுத்துள்ளார். ஓட்டு மொத்தத்தில் ரோகித் சர்மா தலைமையில் 2 ஆட்டத்தில் மட்டுமே தோல்வி ஏற்பட்டு இருக்கிறது. ரோகித் சர்மா 6 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக பணியாற்றி இருக்கிறார். அதில் 5 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 1 ஆட்டத்தில் தோற்றது.
Tags:    

Similar News