search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுனில் கவாஸ்கர்"

    • எங்கே பந்து வீசினால் டோனி சிக்சர் அடிப்பார் என்று தெரிந்து கொண்டு ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டது போல் தெரிந்தது.
    • பாண்ட்யா அவருடைய ஹீரோவின் அரவணைப்பை பெறுவதற்காக வேண்டுமென்றே பந்து வீசியதுபோல் தெரிந்தது.

    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை- சென்னை அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 206 ரன்கள் சேர்த்தது.

    19 ஓவரில் சிஎஸ்கே 180 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரை பாண்ட்யா வீசினார். முதல் பந்தில் விக்கெட் கிடைத்தது. அடுத்து வந்த டோனி ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே 206 ரன்கள் குவித்தது. இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் எங்கே பந்து வீசினால் டோனி சிக்சர் அடிப்பார் என்று தெரிந்து கொண்டு ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டது போல் தெரிந்தது என சுனில் கவாஸ்கர் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது நீண்ட காலத்திற்குப் பின் நான் பார்த்த மோசமான பந்து வீச்சாகும். அது பாண்ட்யா அவருடைய ஹீரோவின் அரவணைப்பை பெறுவதற்காக வேண்டுமென்றே பந்து வீசியதுபோல் தெரிந்தது.

    எங்கே பந்து வீசினால் டோனி சிக்சர் அடிப்பார் என்று தெரிந்து கொண்டு ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டது போல் தெரிந்தது. ஒரு சிக்சர் அடிக்கவிட்டால் பரவாயில்லை ஆனால் தொடர்ந்து லென்த் பாலாக வீசி டோனி சிக்ஸர் அடிப்பதற்கு ஏற்ற வகையில் ஹர்திக் பாண்டியா பந்து வீசி இருக்கிறார். மூன்றாவது பந்து, அதைவிட மோசம். லெக்சைடில் பந்து ஃபுல் டாஸ் ஆக வந்தது.

    அதை டோனி எளிதாக சிக்சருக்கு விரட்டினார். இது நிச்சயம் ஒரு மோசமான பந்துவீச்சு. ஒரு மோசமான கேப்டன்சி. என்னை கேட்டால் ருதுராஜ், ஷிவம் துபேவின் அதிரடிக்கு பின்பு சென்னை அணியை 185 - 190 ரன்களுக்குள் மும்பை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    சுனில் கவாஸ்கரின் இந்த கருத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. 

    • இந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
    • சுனில் கவாஸ்கர் டைமிங்கில் கொடுத்த ரியாக்ஷன் வைரல்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்து கொண்ட சம்பவம் மைதானத்தில் மயான அமைதியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

    போட்டியின் போது களத்திற்கு வந்த கம்பீர் கோலியை கட்டியணைத்தார். இது தொடர்பான வீடியோவை தனியார் நிறுவனம் மீண்டும் ஒளிபரப்பியது. அப்போது வீடியோவை பார்த்த சுனில் கவாஸ்கர் டைமிங்கில் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.


    இந்த வீடியோவை பார்த்த ரவி சாஸ்திரி, "கோலி, கம்பீர் கட்டியணைத்துக் கொண்டது கே.கே.ஆர். அணிக்கு ஃபேர்பிளே (Fairplay) விருது கிடைக்க உதவியாக இருக்கும்," என்று தெரிவித்தார். இதை கேட்ட சுனில் கவாஸ்கர், "ஃபேர்பிளே மட்டுமல்ல ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்," என்று தெரிவித்தார்.

    விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்துக் கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    • குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதல் ஓவரை வீசவில்லை.
    • 3-வது பவுலராக ஆட்டத்தின் 4-வது ஓவரில்தான் பந்து வீச வந்தார்.

    அகமதாபாத்:

    ஹர்த்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. சுப்மன்கில் தலைமையிலான குஜராத் அணி தொடக்க ஆட்டத்திலேயே வெற்றி பெற்றது.

    குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதல் ஓவரை வீசவில்லை. 3-வது பவுலராக ஆட்டத்தின் 4-வது ஓவரில்தான் பந்து வீச வந்தார். ஹர்த்திக் பாண்ட்யா, லுகே வுட் ஆகியோருக்கு பிறகே வீசினார்.

    ஹர்த்திக் பாண்ட்யாவின் இந்த முடிவு தொடர்பாக டெலிவிஷன் வர்ணனையாளர்களான கவாஸ்கர், பீட்டர்சன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    பும்ரா முதல் ஓவரை வீசாதது ஏன்? எனக்கு இது புரியவில்லை என்று பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு கவாஸ்கர் பதில் அளிக்கும்போது, மிக நல்ல கேள்வி, மிக மிக நல்ல கேள்வி என்றார்.

    • ஐந்து இன்னிங்சில் மூன்று அரைசதம் அடித்துள்ளார் சர்பராஸ் கான்.
    • தேனீர் இடைவேளைக்குப்பின் முதல் பந்திலேயே சர்பராஸ் கான் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன் குவித்துள்ளது. கில், ரோகித் சர்மா ஆகியோர் சதம் விளாசிய நிலையில் ஜெய்ஸ்வால், தேவ்தத் படிகல், சர்பராஸ் கான் ஆகியோர் அரைசதம் அடித்துள்ளனர்.

    சர்பராஸ் கான் தனது ஐந்து இன்னிங்சில் 3 அரைசதம் விளாசியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் மிகப்பெரிய ஸ்கோர்களை எட்டிய அவர் இன்னும் மூன்று இலக்க ரன்னை (100) தொடவில்லை.

    நேற்றைய ஆட்டத்தில் சர்பராஸ் கான் தொடக்கத்தில் 30 பந்தில் 9 ரன்கள் அடித்திருந்தார். அதன்பின் 55 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி 25 பந்தில் 42 ரன்கள் விளாசினார். மதிய தேனீர் இடைவேளையின்போது அவர் அவர் 59 பந்தில் 56 ரன்கள் எடுத்திருந்தார்.

    உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே சர்பராஸ் கான் ஆட்டம் இழந்தார். சோயிப் பஷீர் வீசிய பந்தை ஆஃப் சைடு கட் ஷாட் அடிக்க முயன்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி பந்து ஷார்ட் ஆக வீசப்படவில்லை. டாஸ்அஃப் ஆக வீசப்பட்ட பந்து சற்று கூடுதலாக பவுன்ஸ் ஆனது. இதனால் எட்ஜ் ஆகி ஸ்லிப் திசையில் கேட்ச் ஆனார்.

    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய முதல் பந்தையே அவர் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எதிர்கொண்ட விதம் சுனில் கவாஸ்கருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை.

    பொதுவாக டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு பந்தையும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். அரைசதம் அடித்து விட்டோம், சதம் அடித்துவிட்டோம் என கவனக்குறைவாக விளையாடினால் விக்கெட்டை இழக்க நேரிடும்.

    கவாஸ்கர் டான் பிராட்மேனுடன் உரையாடியபோது, இது தொடர்பாக பிராட்மேன் கூறிய கருத்தை கவாஸ்கர் சர்பராஸ்கானுக்கு நினைவூட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக கவாஸ்கர் கூறுகையில் "டான் பிராட்மேன் உடன் உரையாடும்போது அவர் என்னிடம் "நான் 200 ரன்கள் அடித்திருந்தாலும் கூட ஒவ்வொரு பந்தையும் நான் எதிர்கொள்ளும்போது, என் மனதில் நான் ஜீரோவில் இருக்கிறேன் என்றுதான் நினைத்துக் கொள்வேன்" என்றார். ஆனால் சர்பராஸ் கான் இங்கு இதுபோன்ற ஷாட்டை செசன் தொடங்கிய முதல் பந்திலேயே அடித்துள்ளார்" என்றார்.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்னில் சுருண்ட நிலையில், இந்தியா 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பும்ரா 19 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • ஆஸ்திரேலியாவில் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் தடுமாறிய இந்திய அணி கபாவில் மட்டுமல்லாமல் மெல்போர்னிலும் வென்றது.
    • இந்தியா வெல்வதற்கு எப்போதும் பெரிய வீரர்கள் தேவையில்லை என்று நான் சொல்வேன்.

    மும்பை:

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

    முன்னதாக இந்த தொடரில் விராட் கோலி, முகமது ஷமி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பல்வேறு காரணங்களால் விலகியதை பயன்படுத்தி இந்தியாவை வீழ்த்துவோம் என்று மைக்கேல் ஆதர்டன் போன்ற இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் 2020/21 பார்டர் - கவாஸ்கர் தொடரில் 36 ரன்களில் ஆல் அவுட்டாகி தவித்தபோது விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவில் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் தடுமாறிய இந்திய அணி கபாவில் மட்டுமல்லாமல் மெல்போர்னிலும் வென்றது. குறிப்பாக 36-ரன்களில் ஆல் அவுட்டான பின் மெல்போர்னில் வென்ற இந்தியா சிட்னியில் போராடி தோல்வியை தவிர்த்தது.

    ஒருவேளை அந்த போட்டியிலும் ரிஷப் பண்ட் நின்று விளையாடியிருந்தால் இந்தியா வென்றிருக்கும். ஆனால் அந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய இளம் வீரர்கள் காட்டிய தைரியம், சகிப்புத்தன்மை, துணிச்சல் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை இந்த இங்கிலாந்து தொடரிலும் தெரிந்தன.

    அதனால்தான் இந்தியா வெல்வதற்கு எப்போதும் பெரிய வீரர்கள் தேவையில்லை என்று நான் சொல்வேன். எனவே இங்கு நான் இல்லாமல் இந்திய அணி இல்லை என்று நினைக்கும் பெரிய வீரர்களுக்கு நீங்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் நாங்கள் வெல்வோம் என்பதை இந்த 2 தொடர்களும் காட்டியுள்ளன. இதற்கான பாராட்டுகள் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அடங்கிய அணி நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டும்.

    இந்த தொடர் நம்மிடம் பெரிய வீரர்கள் இல்லாவிட்டாலும் உறுதியான மனம் கொண்ட வீரர்கள் இருந்தால் வெல்ல முடியும் என்பதை காண்பித்துள்ளது.

    என்று கவாஸ்கர் கூறினார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகினார்.
    • சில நாட்களுக்கு முன்னர் விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. முன்னணி வீரர்கள் இன்றி இளம் வீரர்களுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது.

    இந்த தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். அவர் எதற்காக விலகினார் என்பது கேள்வி கூறியாக இருந்தது. இது குறித்து பல வதந்திகள் பரவிய நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது தெரிய வந்தது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வதந்திக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்தார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரிலும் இருந்தும் விராட் கோலி விலகலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகியது போல, ஐபிஎல் 2024 தொடரிலும் விராட் கோலி விலகலாம்.

    ரோகித் சர்மா குறித்து அவர் பேசியது, மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது சரி. இதனால் ரோகித் எந்தவித பதற்றம் இன்றி விளையாடலாம்.

    துருவ் குறித்து பேசியது, இங்கிலாந்து எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    • கிரிக்கெட் பற்றிய துருவ் ஜுரலின் அணுகுமுறையும் ஆட்டத்தின் போக்கைக் கணித்து ஷாட்களை விளையாடுவது ஆச்சரியமாக உள்ளது
    • இவரைப் பார்க்கும் போது அடுத்த எம்.எஸ். தோனி உருவாவது போல் தோன்றுகிறது

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அதில் 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் துரூவ் ஜுரல் 90 ரன்கள் சேர்த்துத் தடுமாறிய இந்திய அணியை ஓர் அளவிற்கு ரன்கள் சேர்க்க உதவினார். இந்த அசத்தலான ஆட்டத்தின் மூலம் துருவ் ஜுரல் தனது முதல் டெஸ்ட் அரைச்சதத்தைப் பதிவு செய்தார்.

    இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துத் தடுமாறி இருந்த போது தான் துருவ் ஜுரல் களத்திற்கு வந்து, இந்திய அணியை ஓர் நல்ல ரன்களை எடுக்க உதவியாக இருந்தார்.

    துருவ் ஜுரலின் இந்த ஆட்டத்தை பார்த்து வியந்த சுனில் கவாஸ்கர் அவரை முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனியோடு ஒப்பிட்டுப் பாராட்டி உள்ளார்.

    இது குறித்து பேசிய கவாஸ்கர், "கிரிக்கெட் பற்றிய துருவ் ஜுரலின் அணுகுமுறையும் ஆட்டத்தின் போக்கைக் கணித்து ஷாட்களை விளையாடுவது ஆச்சரியமாக உள்ளது. இவரைப் பார்க்கும் போது அடுத்த எம்.எஸ். தோனி உருவாவது போல் தோன்றுகிறது" இவ்வாறு சுனில் கவாஸ்கர் துருவ் ஜுரலை பாராட்டியுள்ளார்.

    • டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய ஜெய்ஸ்வால் 618 ரன்கள் அடித்துள்ளார்.
    • டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இதுவரை 934 ரன்கள் அடித்துள்ளார்.

    5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், 600 ரன்களை கடந்து இளம் வீரர் ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். ராஞ்சியில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் இச்சாதனையை அவர் படைத்துள்ளார்.

    இந்த டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய ஜெய்ஸ்வால் 618 ரன்கள் அடித்துள்ளார். இதில் 2 அரை சதம் மற்றும் 2 இரட்டை சதமும் அடங்கும்

    சுனில் கவாஸ்கர், திலிப் தர்தேசாய், ராகுல் டிராவிட் வீராட் கோலிக்கு அடுத்தபடியாக 5-வது இந்திய வீரராக இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

    1971-ம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர், 4 சதங்கள், 3 அரை சதங்களுடன் 774 ரன்கள் குவித்ததே இதுவரை தனிப்பட்ட இந்திய வீரரின் சாதனையாக உள்ளது. இதனை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு 156 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

    மேலும், டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இதுவரை 934 ரன்கள் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை அடிப்பதற்கு அவருக்கு 66 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • "டைமிங்" மற்றும் "ஷாட் செலக்ஷன்" ஆகியவற்றில் ஹனிஃப் கை தேர்ந்தவர்
    • 1958ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஹனிஃப் சாதனை புரிந்தார்

    "லிட்டில் மாஸ்டர்."

    கிரிக்கெட் விளையாட்டில் இந்த பட்டத்தை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது, முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar); அதற்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar).

    1971லிருந்து 1987 வரை கவாஸ்கர் இந்தியாவிற்காக 125 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார்.

    டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்கள், 34 சென்சுரிகள், 50க்கும் மேல் சராசரி ரன் குவிப்பு என பெரிய சாதனைகளை புரிந்ததால், சுனில் கவாஸ்கர் "லிட்டில் மாஸ்டர்" என அழைக்கப்படுவது பொருத்தம்தான். டெஸ்ட் விளையாட்டில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் அந்தஸ்தை பெற்றவரும் கவாஸ்கர்தான்.

    பவுன்சர்களுக்கு சாதகமான விக்கெட்டுகளில், ஹெல்மெட் அணியாமல், உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டு சிறப்பாக விளையாடியது அவரது சாதனைக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

    ஆனால், முதல் முதலாக "லிட்டில் மாஸ்டர்" என அழைக்கப்பட்ட சிறப்பான வீரர், கவாஸ்கர் அல்ல.


    பாகிஸ்தான் அணியை சேர்ந்த பேட்ஸ்மேன், ஹனிஃப் மொகம்மது (Hanif Mohammad), அப்பட்டத்திற்கு சொந்தமானவர்.

    1952லிருந்து 1969 வரை அந்நாட்டிற்காக 55 டெஸ்ட் மேட்சுகள் விளையாடி, 3915 ரன்கள் குவித்த ஹனிஃப் மொகம்மது, 43.5 எனும் சராசரியில் ரன்களை குவித்தார்.

    பேட்டிங் செய்பவர்களுக்கு அவசியமான "டைமிங்" மட்டும் "ஷாட் செலக்ஷன்" ஆகிய இரண்டிலும் ஹனிஃப் கைதேர்ந்தவர்.

    டெஸ்ட் மேட்சுகளில் ஆசியாவிலிருந்து முதலில் 300 ரன்கள் அடித்த பெருமை ஹனிஃபிற்கு உண்டு.


    1958ல் மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் 970 நிமிடங்களில் 337 ரன்கள் அடித்து தோல்வியை நோக்கி சென்ற பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை எளிதாக்கினார்.

    2016 ஆகஸ்ட் 11 அன்று தனது 81-வது வயதில், நுரையீரல் நோய் சிகிச்சை பலனின்றி காலமானார்.

    முதல் லிட்டில் மாஸ்டரான ஹனிஃப் மொகம்மதுவின் சாதனையை பல வருடங்களுக்கு பின், 1997ல் இலங்கையின் சனத் ஜெயசூரியாவும், 2004ல் வீரேந்தர் சேவாக்கும் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

    • டி20 உலகக் கோப்பையில் ரோகித், கோலியின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    • 20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பு ஐ.பி.எல் போட்டியில் தான் இந்திய வீரர்கள் விளையாடுகிறார்கள்.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ஜூன் மாதம் நடக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி 20 ஓவர் தொடர் இன்று ஆரம்பமாகும் ஆப்கானிஸ்தான் போட்டியாகும்.

    அந்த அணி இந்தியாவுடன் மூன்று 20 ஓவரில் ஆடுகிறது. 2-வது ஆட்டம் 14-ந் தேதியும், 3-வது ஆட்டம் 17-ந்தேதியும் நடக்கிறது.

    சீனியர் வீரர்களான ரோகித்சர்மாவும், விராட் கோலியும் 20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்து இருந்தனர். இதனால் இருவரும் ஆப்கானிஸ்தான் தொடரில் தேர்வு பெற்றனர். இருவரும் 14 மாதங்களுக்கு பிறகு 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளனர்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு ஐ.பி.எல். போட்டி முக்கியமானதாக இருக்கும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பு ஐ.பி.எல் போட்டியில் தான் இந்திய வீரர்கள் விளையாடுகிறார்கள். இதனால் இந்த போட்டியின் சிறப்பு நிலை உலகக்கோப்பைக்கு முக்கியமானதாக இருக்கும்.

    ரோகித்சர்மாவும், விராட் கோலியும் சாதாரண ஐ.பி.எல்.லில் ரன் குவித்தாலும், ஒவ்வொரு ஆட்டத்திலும் ரன் குவிப்பை எதிர்பார்க்க முடியாது. அவர்களது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களை அணியில் தேர்வு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் டெஸ்ட் மேட்சில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வென்றது
    • ஐபிஎல் தோன்றியதும் பல பேஸ் பவுலர்கள் வந்து விட்டனர் என்றார் கவாஸ்கர்

    தென் ஆப்பிரிக்காவில், இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணியினருக்கு இடையே 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் மேட்ச் தொடர் நடைபெற்றது.

    முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியுற்றது.

    நேற்று, கேப் டவுன் நகரில் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா முதலில் ஆடியது.

    இந்திய வலது கை வேகப்பந்து வீச்சாளரான மொகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜஸ்பித் பும்ரா மற்றும் முகேஷ் குமார், இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    சிராஜ், 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது பவுலிங் வரலாற்றில் சாதனை நிகழ்வாகும்.

    இந்திய வேகப்பந்து தாக்குதலை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்து 55 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனார்கள்.

    இறுதியில் இந்திய அணி வென்று, தொடரை சமன் செய்தது.


    இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்தார்.

    அவர் கூறியிருப்பதாவது:

    அனைத்து புகழும் கபில் தேவையே சாரும். இந்தியாவில் சுழற்பந்து வீச்சாளராக மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயமில்லை என நிரூபித்தவர் அவர்.

    தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் புது பந்து பவுலிங் செய்யும் போது சாதகமான சூழ்நிலை நிலவும்.

    கிரிக்கெட் உலகம் வியக்கும் வகையில் இந்திய அணிக்கு பலம் சேர்க்க வேகப்பந்து வீச்சாளர்கள் தோன்றியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஐபிஎல் (IPL) தோன்றிய பிறகு கடந்த 10-12 வருடங்களில் இந்தியாவில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி உள்ளனர்.

    வலது கரம் மற்றும் இடது கரம் என இரண்டு வகையிலும் சிறப்பாக பந்து வீச பவுலர்கள் தற்போது உண்டு. ஒருவர் இல்லையென்றால் அவரின் இடத்தை நிரப்ப மற்றொருவர் இருக்கிறார். பும்ரா இல்லாத போது ஷமி களமிறங்கி திறமையை வெளிப்படுத்தினார்.

    இவையனைத்துமே கபில் தேவிற்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

    இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

    நாளை மறுநாள் இந்தியாவிற்காக கிரிக்கெட்டில் முதல் உலக கோப்பையை வென்ற அணியின் கேப்டன் கபில் தேவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேஎல் ராகுல் அடித்த அரை சதம் சதத்திற்கு சமமாகும்.
    • சதமடிக்கிறாரா இல்லையா என்பது அவருடன் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பொறுத்து அமையும்.

    தென் ஆப்பிரிக்கா -இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது.

    ஒரு கட்டத்தில் 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா 200 ரன்களை கடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்காவுக்கு சவாலை கொடுத்த கேஎல் ராகுல் 10 பவுண்டரி 2 சிக்சருடன் 70* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடி வருகிறார்.

    இந்நிலையில் கடினமான பிட்ச்சில் அடித்த இந்த 70 ரன்கள் சதத்திற்கு சமம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கேஎல் ராகுல் அடித்த அரை சதம் சதத்திற்கு சமமாகும். சதமடிக்கிறாரா இல்லையா என்பது அவருடன் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பொறுத்து அமையும். ஆனால் சததத்திற்கு அவர் தகுதியானவர். ஒருவேளை அதை அடிக்காமல் போனாலும் என்னை பொறுத்த வரை இந்த ரன்கள் சதத்திற்கு சமமாகும்.

    முதல் பந்திலிருந்தே அவருடைய பேலன்ஸ் நன்றாக இருக்கிறது. குறிப்பாக அவருடைய தலை நேராக இருப்பதால் பந்தை எளிதாக விட முடிகிறது. தன்னுடைய உயரத்தை பயன்படுத்தி அவரால் பவுன்சரை அடிக்க முடிகிறது. தம்முடைய பேலன்ஸை பயன்படுத்தி அவர் முன்னங்கால் மற்றும் பின்னங்காலில் விளையாடுவது அபாரமாக இருக்கிறது.

    அவருடைய திறமையை நாம் நீண்ட காலமாக அறிவோம். இருப்பினும் 8 - 9 மாதங்கள் காயத்தால் அவர் தடுமாற்றமாக செயல்பட்டார். தற்போது வித்தியாசமான ராகுலை பார்க்கிறோம். இத்தனை நாட்களாக நாம் பார்க்க ஆசைப்பட்ட ராகுலை தற்போது பார்ப்பது அருமையாக உள்ளது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    ×