என் மலர்
நீங்கள் தேடியது "சுனில் கவாஸ்கர்"
- நியூசிலாந்து அணி நிர்ணயித்த 154 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி வெறும் 10 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது.
- எதிரணி வீரர்களின் மனதில் அச்சத்தையும் விதைத்து வருகிறது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்நிலையில் இந்திய அணி எதிரணி வீரர்களின் மனதில் அச்சத்தை விதைத்து வருவதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணி ஒரு சாம்பியன் அணி. அவர்கள் பந்துவீச்சு, பீல்டிங் மற்றும் பேட்டிங் என அனைத்திலும் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இந்திய அணி தற்போது போட்டிகளில் வெற்றி பெறுவதுடன் மட்டுமல்லாமல், எதிரணி வீரர்களின் மனதில் அச்சத்தையும் விதைத்து வருகிறது.
வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. வீரர்கள் தீவிரமாகப் பயிற்சி செய்து வருகிறது. இந்தத் தொடர் ஒரு ஆரம்பம்'மட்டுமே என்றும் கூறியுள்ளார்.
ரிங்கு சிங் மற்றும் ஹர்திக் பாண்ட்யா போன்ற வீரர்கள் இன்னும் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்காமலேயே இந்தியா எளிதாக வெல்வது அணியின் திறமையைக் காட்டுகிறது. உலகின் சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா என கவாஸ்கர் கூறினார்.
மேலும் போட்டி முடிந்த பிறகு இது குறித்துப் பேசிய நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டல், வரவிருக்கும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா நினைத்தால் இரண்டு அணிகளைக் களமிறக்கலாம். அப்படி இரண்டு அணிகள் விளையாடினாலும், அந்த இரண்டு அணிகளுமே நிச்சயம் முதல் நான்கு இடங்களைப் பிடித்து அரையிறுதிக்குத் தகுதி பெறும். அந்த அளவிற்கு அவர்களிடம் திறமையான வீரர்கள் உள்ளனர்" என்று புகழ்ந்தார்.
அதற்குச் சிரித்துக்கொண்டே சுனில் கவாஸ்கர், "உண்மையில் என்னைக் கேட்டால், அரையிறுதி மட்டுமல்ல, அந்த இரண்டு இந்திய அணிகளுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறி, கோப்பைக்காகத் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் என்று சொல்வேன்" என்று அதிரடியாகக் கூறினார். அதாவது இந்திய அணியின் முதல் தர அணியும், இரண்டாம் தர அணியும் மோதினாலே அது உலகக்கோப்பை இறுதிப்போட்டி போலத் தான் இருக்கும் என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
- சில வீரர்கள் தங்களைப் பற்றிய எதிர்பார்ப்புகளுக்காக விளையாடுவார்கள்.
- கோலி ரன்களைக் குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.
இந்தியா - நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு முறை வென்று தொடரில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இளம் வீரர்கள் கோலியின் மனநிலையைப் பின்பற்ற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டின் கோட். 52 ஒருநாள் சதங்களை எட்டிய அவரது சாதனை, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்ததுடன் அவரை ஒரு தனி உயரத்தில் வைத்துள்ளது.
கோலி எந்த ஒரு குறிப்பிட்ட "இமேஜுக்கும்" (Image) கட்டுப்படாமல், ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதே அவரது வெற்றிக்கான ரகசியம். சில வீரர்கள் தங்களைப் பற்றிய எதிர்பார்ப்புகளுக்காக விளையாடுவார்கள், ஆனால் கோலி ரன்களைக் குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.
இளம் வீரர்கள் கோலியின் மன உறுதி மற்றும் ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விதத்தைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தோல்வியின் விளிம்பில் இருந்தபோதும் விட்டுக்கொடுக்காமல் போராடும் அவரது குணம் பாராட்டுக்குரியது.
என கவாஸ்கர் கூறினார்.
- கோலி இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால் கூட 16 சதங்கள் தான் தேவை.
- ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி இப்படி 20 ஓவர் போட்டி அவதாரம் எடுப்பதை பார்ப்பது அரிது.
மும்பை:
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய வீரர் விராட்கோலி இரண்டு சதங்கள் விளாசினார். ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அவர் இதுவரை 84 சதங்கள் (ஒரு நாள் போட்டியில் 53, டெஸ்டில் 30 மற்றும் 20 ஓவர் போட்டியில் ஒரு சதம்) அடித்துள்ளார். இந்த வகையில் சச்சின் டெண்டுல்கருக்கு (100 சதம்) அடுத்த இடத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் டெண்டுல்கரின் சாதனையை கோலி சமன் செய்வார் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். கவாஸ்கர் கூறும் போது, 'கோலியால் 100 சதங்கள் ஏன் அடிக்க முடியாது? அவர் இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால் கூட 16 சதங்கள் தான் தேவை. தற்போது அவர் சிறப்பான பேட்டிங் செய்து வருகிறார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 2 சதம் எடுத்தார். அடுத்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு சதம் அடித்தால் சதங்களின் எண்ணிக்கை 86-ஐ தொடும். அதன் பிறகு அவர் நிச்சயம் 100 சதங்களை எட்டுவதற்கு நல்ல வாய்ப்புள்ளது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்ததால் இந்தியாவின் வெற்றி உறுதி என்பதை உணர்ந்த கோலி தனக்கு தாமே மகிழ்ச்சியுடன் அதிரடியாக விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி இப்படி 20 ஓவர் போட்டி அவதாரம் எடுப்பதை பார்ப்பது அரிது' என்றார்.
மற்றொரு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், 'தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டங்களில் அடுத்தடுத்து 100 ரன்களுக்கு மேல் எடுத்தார். அவர் சதங்களின் சக்ரவர்த்தி. சூப்பர் பார்மில் உள்ளார். 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை உள்பட சுமார் 40 ஆட்டங்கள் மீதமுள்ளன. அதனால் அவரால் 100 சதங்கள் எட்ட முடியும்' என்றார்.
டெஸ்ட் மற்றும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட 37 வயதான கோலி தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
- ஆடுகளத்தை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற கம்பீரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
- மோசமான பேட்டிங் நுட்பமும், நிலைத்து நின்று போராடும் மனோபலமும் இல்லாததே தோல்விக்கு காரணம்.
கொல்கத்தா:
கொல்கத்தாவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டு தோற்றது கடும் விமர்சனத்துக்குள்ளானது. சுழலுக்கு உகந்த வகையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆடுகளத்தில் சமாளிக்க முடியால் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறிப்போனார்கள். அதே சமயம் இந்த கடினமான ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார்.
இது போன்ற ஆடுகளம் (பிட்ச்) தான் வேண்டும் என்று நாங்கள் கேட்டு பெற்றோம். பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வி ஏற்பட்டதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறினார். பிட்ச் விவகாரத்தில் கம்பீரின் நிலைப்பாட்டை முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, புஜாரா, ஹர்பஜன்சிங் உள்ளிட்டோர் குறை கூறினர்.
இந்த நிலையில் ஆடுகள சர்ச்சையில் இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது விவாதத்தை முன் வைத்துள்ளார். அவர் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமாவிடம் இருந்து இந்திய வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் ஒரு அற்புதமான இன்னிங்சை விளையாடினார். பொறுமையாக மனஉறுதியுடன் போராடுவது எப்படி என்பதை களத்தில் காட்டினார். இது தான் முறையான டெஸ்ட் கிரிக்கெட்டுக்குரிய பேட்டிங். ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து டெஸ்ட் போட்டி வித்தியாசமானது என்பதை நமது வீரர்கள் மறந்து விட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதற்குரிய ஷாட்டுகளை ஆடும் போது தான் தாக்குப்பிடிக்க முடியும்.
ஆடுகளத்தை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற கம்பீரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆடுகளத்தில் பந்து அளவுக்கு அதிகமாக சுழன்று திரும்பவில்லை. தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மரின் பந்து வீச்சை பாருங்கள். நிறைய பந்துகள் பிட்ச் ஆனதும் நேராக ஸ்டம்புக்கு சென்றது. திடீரென ஒன்றிரண்டு பந்துகள் திரும்பின. எனவே 124 ரன் இலக்கை 'சேசிங்' செய்திருக்க வேண்டும்.
மோசமான பேட்டிங் நுட்பமும், நிலைத்து நின்று போராடும் மனோபலமும் இல்லாததே தோல்விக்கு காரணம். நமது அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் உள்ளுர் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. நீங்கள் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடினால், இத்தகைய சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அந்த அனுபவம் சர்வதேச போட்டியில் கைகொடுக்கும்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் போது எந்த அணியும் ஆடுகளங்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை. இதனால் பிட்ச் பராமரிப்பாளர்கள் எந்த நெருக்கடியும் இன்றி, தாங்கள் நினைத்த மாதிரி ஆடுகளத்தை உருவாக்குகிறார்கள். எத்தகைய ஆடுகளம் சிறந்ததாக இருக்கும் என்பது மற்றவர்களை காட்டிலும் பிட்ச் பராமரிப்பாளர்களுக்கே நன்கு தெரியும். அதனால் அவர்களின் செயல்பாடுகளில் யாரும் தலையிடக்கூடாது. நமக்கு ஏற்ற வகையிலான ஆடுகளத்தை தயார்செய்யும்படி கேட்டால், தோல்விக்கு தான் வித்திடும். அதனால் பிட்ச் பராமரிப்பாளர்களை சுதந்திரமாக விட்டு விடுங்கள்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
- ஆடுகளம் அமைப்பவரை அவரின் செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் விட்டு விடுவது நல்லது.
- பிட்ச் தயாரிப்பவரிடம் நீங்கள் அதிகமாக தலையிடக்கூடாது.
கொல்கத்தா, நவ.18-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை எடுக்க முடி யாமல் 93 ரன்னில் சுருண்டு படு தோல்வி அடைந்தது.இரு அணிகளும் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு ஆடுகளம் மோசமாக இருந் தது. 3 தினங்களில் போட்டி முடிவடைந்தது.
தொடக்க நாளில் இருந்தே கொல்கத்தா ஆடு களம் (பிட்ச்) சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருந் தது. இது மாதிரியான பிட்சை அமைக்குமாறு ஆடு கள பராமரிப்பாளரிடம் பயிற்சியாளர் காம்பீர் கேட் டுள்ளார். இதனால் தான் இந்திய அணி 4 சுழற்பந்து வீரர்களுடன் களம் இறங் கியது. அதே நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்க ளாலும் இந்த ஆடுகளத்தில் நிலைத்து நின்று ஆட முடிய வில்லை. இதனால் காம்பீர் கடும் விமர்சனத்தை சந்தித் துள்ளார்.
இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி, முன்னாள் வீரர்கள் புஜாரா, ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆடுகளம் தொடர்பாக காம்பீரை சாடி இருந்தனர்.
இந்த நிலையில் முன் னாள் கேப்டனும், டெலிவி சன் வர்ணனையாளருமான கவாஸ்கரும் இது தொடர் பாக தனது கருத்தை பதிவு செய்துள்ளனர். ஆடுகளத் தின் தன்மை தொடர்பாக தலையிடக்கூடாது என்று அவர் காம்பீரை அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறியதாவது:-
ஆடுகள பராமரிப்பாள ரை நீங்கள் (காம்பீர்) தனி யாக விட்டு விட வேண்டும். பிட்ச் நிலைமைகளை உத்தர விட முயற்சிக்கக் கூடாது. அது சில நேரங்களில் எதிர் விளைவை ஏற்படுத்தும். ஆடுகளம் அமைப்பவரை அவரின் செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் விட்டு விடு வது நல்லது. ஏனென்றால் அவர் மற்றவர்களை விட தனது வேலையை பற்றி நன்கு அறிவார்.
பிட்ச் தயாரிப்பவரிடம் நீங்கள் அதிகமாக தலை யிடக்கூடாது. இதனால் ஏற் படும் விளைவுகளை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
- சுனில் கவாஸ்கர் 10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர்.
- அதிக டெஸ்ட் சதங்கள் (34) அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
மும்பை:
வான்கடே மைதானத்தில் மும்பை கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்த ஜாம்வான்களை கவுரவிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், அது ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் எனவும் மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருந்தது. இதற்கு ஷரத்பவார் அருங்காட்சியகம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வான்கடே மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சரத்பவார் அருங்காட்சியகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இதன்
நுழைவாயிலில் இந்திய பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கரின் ஆளுயர சிலையை சரத்பவார் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் 1971 முதல் 1987-ம் ஆண்டு வரை இந்தியா மற்றும் மும்பை அணிகளுக்காக விளையாடியவர்.
10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர், அதிக டெஸ்ட் சதங்கள் (34) அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார்.
ஏற்கனவே வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சுப்மன் கில் சில வாரங்களுக்கு முன்பு தான் டெஸ்டில் 750 ரன்களுக்கு மேல் குவித்தார்.
- துணை கேப்டன் பதவி எதிர்கால கேப்டன் பதவிக்கான தெளிவான அறிகுறியாகும்.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபியில் நடக்கிறது.
இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஐ.பி.எல். போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐய்யருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை தேர்வு செய்யாமல் நிராகரித்தனர்.
அதேநேரத்தில் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லுக்கு 20 ஓவர் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. அக்க்ஷர் படேலின் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. 20 ஓவர் அணியில் ஷ்ரேயாஸ் ஐய்யருக்கு வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் வீரர்கள் பலர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவை விமர்சித்துள்ளனர்.
இந்த நிலையில் 20 ஓவர் அணிக்கு சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டதை முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவருக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது சரியே என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கவாஸ்கர் கூறியதாவது:-
சுப்மன் கில் சில வாரங்களுக்கு முன்பு தான் டெஸ்டில் 750 ரன்களுக்கு மேல் குவித்தார். அதுமாதிரி நல்ல நிலையில் இருக்கும் ஒரு வீரரை நீங்கள் ஒதுக்கி வைக்க முடியாது. துணை கேப்டன் பதவி வழங்குவது எதிர்காலத்தில் 20 ஓவர் அணியை வழி நடத்த முடியும் என்பதை அவருக்கு உணர்த்தும் ஒரு வழிமுறையாகும். இது மிகவும் சிறந்த தேர்வு என்று நான் நினைக்கிறேன்.
இங்கிலாந்தில் முதல் முறையாக டெஸ்ட் அணியை வழி நடத்தி 750-க்கும் மேற்பட்ட ரன்களை சுப்மன் கில் குவித்தது பாராட்டதக்கதாகும். அவர் நெருக்கடியை எப்படி கையாண்டார் என்பதை பார்த்தோம். துணை கேப்டன் பதவி எதிர்கால கேப்டன் பதவிக்கான தெளிவான அறிகுறியாகும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
இதற்கிடையே சுப்மன் கில்லை தேர்வு செய்வது தொடர்பாக தமிழக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். எந்த அடிப்படையில் அவர் 20 ஓவரில் தேர்வு செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.
- சுப்மன்கில் அணியில் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராவார்.
- 2-வது டெஸ்டில் கில் குவித்த 269 ரன் மிகவும் சிறப்பானது.
லண்டன்:
சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு இளம் வீரர்களை கொண்ட அணி இங்கிலாந்தில் சாதித்து காட்டியது. தொடரை இழக்காமல் சமன் செய்தது பாராட்டுதலுக்குரியதாகும்.
சுப்மன்கில் கேப்டனாக பொறுப்பேற்று முதல் தொடரிலேயே சாதித்து காட்டினார். மேலும் பேட்டிங்கிலும் அவர் அபாரமாக செயல்பட்டார். 5 டெஸ்டில் 754 ரன்கள் (10 இன்னிங்ஸ்) குவித்தார். சராசரி 75.40 ஆகும். இதில் 4 சதம் அடங்கும். அதிகபட்சமாக 269 ரன் குவித்துள்ளார்.
இந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கும் சுப்மன் கில்லை கேப்டனாக்கலாம் என்று முன்னாள் கேப்ட னும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் யோசனை தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக கூறியதாவது:-
ஒரு நாள் போட்டிக்கும் கேப்டனாக சுப்மன்கில்லை தேர்வு செய்ய தேர்வுக்குழு பரிசீலனை செய்யலாம். ரோகித் சர்மா, விராட் கோலி ஒரு நாள் போட்டியில் விளையாட தயாராக உள்ளனர். அவர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த விஷயங்கள் தேர்வுக் குழுவை பொறுத்தது.
ஆஸ்திரேலியா அல்லது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வுக்குழு விரும்பினால் சுப்மன்கில்லை கேப்டனாக தேர்வு செய்யலாம். இதுவே சரியான நேரமாகும்.
சுப்மன்கில் அணியில் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராவார். 2-வது டெஸ்டில் அவர் குவித்த 269 ரன் மிகவும் சிறப்பானது. ஒவ்வொரு ரன்னும் முக்கியமானது என்பதை அவர் அந்த டெஸ்டில் உறுதிப்படுத்த விரும்பினார்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் 754 ரன்கள் குவித்தார்.
- 4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.
லண்டன்:
இங்கிலாந்த், இந்தியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்னும், இங்கிலாந்து அணி 247 ரன்னும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 396 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
இதன்மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 35 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் நாளை 5-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
நடப்பு தொடரில் இந்திய கேப்டன் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மொத்தம் 754 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சுனில் கவாஸ்கரிடம் இருந்து தட்டிப்பறித்தார்.
இந்நிலையில், சுப்மன் கில்லுக்கு சுனில் கவாஸ்கர் 2 சிறப்பு பரிசுகளை வழங்கினார். தனது கையொப்பமிட்ட ஒரு சிறிய சிவப்பு தொப்பி மற்றும் சட்டை ஒன்றை பரிசாக வழங்கினார்.
இதுதொடர்பாக கவாஸ்கர் கூறுகையில், சிறப்பு. என்னுடைய இன்னொரு சாதனையையும் முறியடிப்பீர்கள் என எதிர்பார்த்தேன். இது என்னிடமிருந்து உங்களுக்கு சிறிய பரிசு. ஒரு சட்டை மற்றும் என்னுடைய கையொப்பமிட்ட தொப்பி. இந்தத் தொப்பியை சிலருக்கு மட்டுமே கொடுப்பேன். வாழ்த்துகள், கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். 2021 ஆஸ்திரேலியா காபா டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்ற நாளன்று அணிந்திருந்த அதிர்ஷ்டமான சட்டையை மீண்டும் இப்போட்டியில் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் அணிந்து வருவேன் என தெரிவித்தார்.
- கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும் அவுட்டாகினர்.
- கவாஸ்கரின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.
மான்செஸ்டர்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது..
அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 49.1 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், சுப்மன் கில் 12 ரன்னிலும் அவுட்டாகினர்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் ரன் குவித்ததன் மூலம் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
அதாவது, வெளிநாட்டு மண்ணில் ஒரு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்த 2வது துவக்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்குமுன், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸ் (1,404), இங்கிலாந்து (1,152), பாகிஸ்தான் (1,001) ஆகிய நாடுகளில் 1,000 ரன்களை விளாசி இருந்தார். தற்போது அவரது சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.
- முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 87 ரன்கள் அடித்தார்.
- இரண்டாவது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 28 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து 269 ரன்கள் குவித்து அவுட்டானார். ஜடேஜா 89 ரன்களும் ஜெய்ஸ்வால் 87 ரன்களும் அடித்து அவுட்டாகினர்.
இதனை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 87 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்சில் 28 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்து, சுனில் கவாஸ்கரின் 49 ஆண்டு கால சாதனையை ஜெயிஸ்வால் முறியடித்தார். முன்னதாக சுனில் கவாஸ்கர் 21 போட்டிகளில் 2,000 ரன்களை கடந்திருந்ததே சாதனையாக இருந்தது.
இருப்பினும், 40 இன்னிங்ஸில் 2000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட், சேவாக் உடன் ஜெயிஸ்வால் முதலிடத்தை பகிர்ந்து கொள்கிறார்.
- தீவிரவாத தாக்குதலில் சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர்.
- ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்குகிறது.
பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது. ஐ.பி.எல். தொடர் மீண்டும் தொடங்குவதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த எஞ்சியுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் டி.ஜே. இசை மற்றும் சியர் லீடர்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது அவற்றில் பாடல்கள், DJ, பெண்கள் நடனம் என எதுவும் இருக்கக் கூடாது என விரும்புகிறேன். தீவிரவாத தாக்குதலில் சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஐபிஎல் போட்டிகளில் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
என கவாஸ்கர் கூறினார்.






