என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rohit sharma"
- மேக்ஸ்வெல் 104 ரன்களுடனும் (48 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்), விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.
- இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக மேக்ஸ்வெல் தேர்வு செய்யப்பட்டார்.
கவுகாத்தி:
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 222 ரன்கள் குவித்தது.
பின்னர் மெகா இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 68 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நெருக்கடியான சூழலில் களம் கண்ட ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், தனக்கே உரிய பாணியில் மட்டையை நாலாபுறமும் சுழட்டினார்.
கடைசி இரு ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய அக்ஷர் பட்டேலின் ஓவரில் 22 ரன் எடுத்தனர். இதையடுத்து கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 21 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. அந்த பந்தை மேக்ஸ்வெல் நேர்பகுதியில் சர்வ சாதாரணமாக பவுண்டரிக்கு விரட்டி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.
மேக்ஸ்வெல் 104 ரன்களுடனும் (48 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்), விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். மேலும் ஆட்டநாயகன் விருதை அவரே பெற்றார்.
இந்நிலையில் ரோகித் சர்மாவின் சாதனையை மேக்ஸ்வெல் சமன் செய்தார். மேக்ஸ்வெல்லுக்கு இது 4-வது சதமாக பதிவானது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவரான இந்திய வீரர் ரோகித் சர்மாவின் (4 சதம்) சாதனையும் சமன் செய்தார்.
மேலும் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 47 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியர்களின் அதிவேக சதத்தை சமன் செய்தார். ஏற்கனவே ஆரோன் பிஞ்ச், ஜோஷ் இங்லிஸ் தலா 47 பந்தில் சதம் அடித்திருந்தனர்.
- டி20 உலகக்கோப்பை வருவதற்கு குறைந்த காலங்கள் மட்டுமே இருக்கிறது.
- டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரும் நடைபெற உள்ளது.
2024 டி20 உலகக்கோப்பையிலும் ரோகித் சர்மாதான் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஜாகீர்கான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;-
டி20 உலகக்கோப்பை வருவதற்கு குறைந்த காலங்கள் மட்டுமே இருக்கிறது. அதற்கு நீங்கள் சற்று அனுபவத்துடன் செல்ல வேண்டும். அத்தொடரில் இந்திய அணியை வழி நடத்தும் பொறுப்பை ஒரு அனுபவமிக்கவரிடம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் அவர்கள் ரோகித் சர்மாவை தேர்ந்தெடுத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். நீண்டகாலமாக விளையாடி வரும் அவருக்கு சூழ்நிலைகளை சமாளிப்பது, அழுத்தத்தை கையாள்வது போன்ற அம்சங்களில் அனுபவம் இருக்கிறது.
டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரும் நடைபெற உள்ளது. எனவே ஒன்று நீங்கள் ரோகித் சர்மாவுடன் செல்ல வேண்டும். அல்லது ஹர்திக் பாண்ட்யா காயத்திலிருந்து எந்தளவுக்கு குணமடைந்து வருகிறார் என்பதை பார்த்து முடிவெடுக்க வேண்டும். ஆனாலும் உலகக்கோப்பைக்கு முன்பாக பாண்ட்யா அதிகப்படியான போட்டிகளில் விளையாடியிருக்க மாட்டார். எனவே அந்த முடிவும் பின்னடைவாகவே இருக்கும்.
என்று கூறினார்.
- ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்த பிறகு இருவரும் டி20-யில் விளையாடவில்லை.
- அடுத்த ஆண்டு வெஸ்ட்இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கும் உலகக் கோப்பையில் அவர்கள் இடம் பிடிப்பார்களா? என்பது கேள்வி.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 3-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் 55 ஆட்டங்களை கொண்டது.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாட வேண்டும் என்று வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரைன் லாரா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் (50 ஓவர்) இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. அபாரமாக விளையாடி முக்கியமான ஆட்டத்தில் தோல்வி ஏற்படுவது சில சமயங்களில் நடக்கும்.
விராட் கோலி, ரோகித் சர்மா அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்களது அனுபவத்துக்கு மாற்று இல்லை. வெஸ்ட்இண்டீஸ் ஆடுகளங்களை நன்கு அறிந்தவர்கள். சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இதனால் 20 ஓவர் உலக கோப்பையில் அவர்கள் விளையாட வேண்டும். அவர்களை அணியில் சேர்க்க வேண்டும்.

இந்தியா எந்த அணியை தேர்வு செய்தாலும் ஒரு வலிமையான சக்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதேநேரத்தில் கோலியும், ரோகித் சர்மாவும் ஜாம்பவான்கள். அவர்களை எளிதில் நிராகரித்துவிட இயலாது.
இவ்வாறு லாரா கூறியுள்ளார்.
இந்திய அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை அரைஇறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்தப் போட்டியில் இருந்து ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 20 ஓவர் அளவில் இடம் பெறவில்லை.
ஜெய்ஸ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட இளம் வீரர்களை கொண்டு 20 ஓவர் அணி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
- இளம் வீரரான ஜெய்ஸ்வால் 25 பந்தில் 53 ரன்கள் விளாசினார்.
- அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா 235 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியால் 191 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
போட்டியின்போது பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், 2-வது பேட்டிங் செய்யும்போது பந்து வீச கடினமாக இருக்கும். இதனால் முதலில் எவ்வளவு ரன்கள் குவிக்க முடியுமோ, அவ்வளவு ரன்கள் குவிக்க இந்தியா திட்டமிட்டது.
அதற்கு ஏற்றபடி தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடினார். இவரது அதிரடியால் இந்தியா பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 77 ரன்கள் குவித்தது. இதில் ஜெய்ஸ்வால் 25 பந்தில் 53 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

இதன்மூலம் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக ரோகித் சர்மா 2020-ல் நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் 23 பந்தில் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்திருந்தார். கே.எல். ராகுல் 2021-ல் துபாயில் ஸ்காட்லாந்துக்கு எதிராக 19 பந்தில் 50 ரன்கள் அடித்திருந்தார். தற்போது இருவரையும் ஜெய்ஸ்வால் முந்தியுள்ளார்.
- டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, விராட் கோலி நீண்ட காலத்திற்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு.
- டி20 கிரிக்கெட்டில் தங்களது எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க பிசிசிஐ இருவருக்கும் சுதந்திரம் வழங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் திகழந்து வருகிறார்கள்.
நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பையை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையுடன் விளையாடினார்கள். தொடர் முழுவதும் அசத்திய இருவரால் உலகக் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.
ஒவ்வொரு உலகக்கோப்பை தொடருக்குப் பின்னரும் அணியின் எதிர்காலம் குறித்து யோசிக்கப்படும். ரோகித் சர்மாவுக்கு தற்போது 36 வயதாகிறது. விராட் கோலிக்கு 35 வயதாகிறது.
டி20 கிரிக்கெட்டில் இருவரின் ஆட்டத்தில் எந்த தொய்வும் இல்லை. என்றபோதிலும், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து யோசிக்கிறது.
அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின் 2026-ல் நடக்கிறது. 2024-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வழி நடத்தும் வகையில் ஹர்திக் பாண்ட்யாவை டி20 அணி கேப்டனாக பிசிசிஐ நியமித்துள்ளது.
தற்போது 2024-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு ரோகித் சர்மா, விராட் கோலியுடன் செல்ல வெண்டுமா? என்பதைத்தான் பிசிசிஐ எடுக்க வேண்டிய முக்கியமான முடிவு.
உலகக் கோப்பை தோல்வியில் இருந்து இந்திய வீரர்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இதற்குள் இந்த கேள்வியை எழுப்பினால் சரியாக இருக்காது என பிசிசிஐ இதுகுறித்து தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
இருந்தபோதிலும், டி20 கிரிக்கெட்டில் உங்களுடைய எதிர்காலம் குறித்து நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அவர்கள் முடிவுக்கே விட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை 2024 உலகக்கோப்பை வரை விளையாட விரும்புகிறோம் என்று இருவரும் தெரிவித்தால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிசிசிஐ ஆராயும். இதில் பிசிசிஐ-க்கு உடன்பாடு இல்லை என்றால், அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ரோகித் சர்மா 148 போட்டிகளில் 140 இன்னிங்சில் 4 சதம், 29 அரைசதங்களுடன் 3863 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 31.32 ஆகும்.
விராட் கோலி 115 டி20 போட்டிகளில் 107 இன்னிங்சில் பேட்டிங் செய்து 1 சதம், 37 அரைசதங்களுடன் 4008 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 52.73 ஆகும்.
- பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
- அணிகள் பட்டியலில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதல் உள்ளது.
துபாய்:
ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.
அந்த வகையில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் 4 இடத்தில் 3 இந்திய வீரர்கள் இடம் பிடித்தனர். முதல் இடத்தில் சுப்மன் கில் தொடர்கிறார். 2-வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமும் 3-வது மற்றும் 4-வது இடங்கள் முறையே விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் பட்டியலில் டாப் 10-ல் 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். சிராஜ் 3-வது இடத்திலும் 4-வது இடத்தில் பும்ராவும் குல்தீப் யாதவ் 6-வது இடத்திலும் 10-வது இடத்தில் முகமது சமியும் உள்ளனர். 741 புள்ளிகளுடன் கேசவ் மகாராஜ் முதல் இடத்தில் உள்ளார்.
அணிகள் பட்டியலில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரோகித் சர்மா நேற்று அடித்த 3 சிக்சரையும் சேர்த்து சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது சிக்சர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்தது.
- இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர் விரட்டிய வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் நேற்று நிகழ்த்தப்பட்ட சில சாதனைகள் வருமாறு:-
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி மாற்றமின்றி தொடர்ந்து 7 ஆட்டங்களில் அதே வீரர்களை களம் இறக்கியது ஒரு வகையில் சாதனையாகும். இதற்கு முன்பு நியூசிலாந்து 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் முதல் 6 ஆட்டங்களில் ஒரே மாதிரியான லெவன் அணியை விளையாட வைத்து இருந்தது.
இறுதி ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 29 ரன் எடுத்த போது, ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் திரட்டிய கேப்டனான நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனின் (2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 10 ஆட்டத்தில் 578 ரன்) சாதனையை தகர்த்தார். ரோகித் சர்மா நடப்பு தொடரில் 11 ஆட்டத்தில் ஆடி ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 597 ரன்கள் சேர்த்துள்ளார்.
அரைஇறுதியில் 117 ரன்கள் விளாசிய இந்திய வீரர் விராட் கோலி இறுதி ஆட்டத்தில் 54 ரன்கள் எடுத்தார். ஒரு உலகக் கோப்பையில் அரைஇறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் 50 ரன்னுக்கு மேல் எடுத்த 7-வது வீரர் கோலி ஆவார். ஏற்கனவே மைக் பிரேயர்லி (இங்கிலாந்து, 1979-ம் ஆண்டு), டேவிட் பூன் (ஆஸ்திரேலியா, 1987), ஜாவித் மியாண்டட் (பாகிஸ்தான், 1992), அரவிந்த டி சில்வா (இலங்கை, 1996), கிரான்ட் எலியாட் (நியூசிலாந்து, 2015), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா, 2015) ஆகியோர் இச்சாதனையை செய்துள்ளனர். 8-வது வீரராக இந்த பட்டியலில் டிராவிஸ் ஹெட்டும் இணைந்தார்.
ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 11 ஆட்டத்தில் 23 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஒரு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளரான இலங்கை முன்னாள் வீரர் முரளிதரனின் சாதனையை (2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 23 விக்கெட்) சமன் செய்தார்.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா நேற்று அடித்த 3 சிக்சரையும் சேர்த்து சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது சிக்சர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்தது. இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர் விரட்டிய வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் இங்கிலாந்துக்கு எதிராக 85 சிக்சர் அடித்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 10 ஓவர்களில் 34 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். அவரது பந்துவீச்சில் ஒரு பவுண்டரியும் அடிக்கப்படவில்லை. இந்த உலகக் கோப்பையில் 10 ஓவர் முழுமையாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒரு பவுண்டரி கூட விட்டுக்கொடுக்காத ஒரே வீரர் இவர் தான்.
ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் 5 கேட்ச் பிடித்தார். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 5 பேரை ஆட்டமிழக்கச் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சிறப்பை பெற்றார்.
இந்திய வீரர் விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் 3 சதம், 6 அரைசதம் உள்பட 765 ரன்கள் எடுத்து, உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற புதிய வரலாறு படைத்து விட்டார். இதில் கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 50 ரன்னுக்கு மேல் எடுத்ததும் அடங்கும். உலகக் கோப்பையில் 2-வது தடவையாக அவர் தொடர்ந்து 5 ஆட்டங்களில் 50 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார்.
2007-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணி மொத்தம் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியதே, உலகக் கோப்பை ஒன்றில் ஒரு அணியின் அதிகபட்ச விக்கெட் வேட்டையாக இருந்தது. அச்சாதனையை இந்தியா நேற்று 3-வது விக்கெட் எடுத்த போது முறியடித்தது.
- விராட் கோலி- கே.எல். ராகுல் ஜோடியை பிரித்தது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமைந்தது.
- இருவரும் அரைசதம் அடித்த உடனே விரைவாக ஆட்டம் இழந்தது இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
போட்டி முடிவடைந்து பரிசு வழங்கும் நிகழ்வின்போது, ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-
கடைசியில் எங்களது சிறந்ததை கைப்பற்றியுள்ளோம். முக்கியமான போட்டிகளில் வீரர்கள் வீறுகொண்டு எழுந்து, சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தினார்கள். இந்த தொடர் முழுவதும் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து சிறப்பாக செயல்பட்டோம். இன்று நாங்கள், சேஸிங் செய்வது சிறந்ததாக இருக்கும் என நினைத்தோம். இது எங்களுக்கு சற்று எளிதாக இருக்கும் என நினைத்தோம். எல்லோரும் இதில் ஆர்வமாக இருந்தனர்.
நான் நினைத்ததை விட ஆடுகளம் கூடுதல் ஸ்லோ ஆக இருந்தது. குறிப்பாக பந்து சுழலவில்லை. அதற்கு ஏற்றவாறு தங்களை சரிசெய்து கொண்டு, பந்து வீச்சாளர்கள் சரியான லைனில் பந்தை பிட்ச் செய்தார்கள்.
தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நாங்கள் பீல்டிங்கில் சொதப்பினோம். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் வயதான வீரர்களை பெற்றுள்ளோம். இருந்தபோதிலும், ஒவ்வொருவரும் தங்களை பணியை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டனர்.
300 ரன்களுக்கு கீழ் என்பது 240-ஆக அமைந்தது. 300 ரன்கள் கடினமாக இருக்கும் என நினைத்தேன். இருந்தாலும், இந்த ஆடுகளம் அதையும் சேஸிங் செய்யக்கூடிய அளவில்தான் இருந்தது. 240-ல் இந்தியாவை கட்டுப்படுத்திய மிகவும் மகிழ்ச்சி. லபுஷேன் பொறுமையாக விளையாடினார். டிராவிஸ் ஹெட் அவருடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தைரியமாக ஆட்டத்தை எடுத்துச் சென்று, பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து, மிகப்பெரிய போட்டியில் தனது கேரக்டரை வெளிப்படுத்தினார். அவர் காயம் அடைந்தபோது, தேர்வாளர்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர். இந்த வெற்றி நீண்ட நாட்களுக்கு ஞாபகத்தில் இருக்கும். இந்த சீசனில் ஏராளமான வெற்றிகளை பெற்றுள்ளோம். அதில் இது மிகவும் உயர்ந்தது. மலையின் உச்சிப்பகுதி.
இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்தார்.
- 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் சிறந்ததாக இருந்திருக்கும்.
- டிராவிஸ் ஹெட்- லபுஷேன் ஜோடி எங்களிடம் இருந்து ஆட்டத்தை அவர்கள் பக்கம் திருப்பி விட்டார்கள்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
போட்டி முடிவடைந்து பரிசு வழங்கும் நிகழ்வின்போது, ரோகித் சர்மா கூறியதாவது:-
முடிவு நாங்கள் நினைத்த வழியில் இல்லாமல் போனது. இன்று எங்களுக்கு சிறந்ததாக இல்லை. நாங்கள் எல்லா வகையிலும் முயற்சி செய்தோம். ஆனால், அவை எங்களுக்கு உதவாமல் போய்விட்டது. 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால், அது சிறந்தாக இருந்திருக்கும். விராட் கோலி- கே.எல். ராகுல் ஜோடி நிலைத்து நின்று ஆடியபோது, நாங்கள் 270 முதல் 280 ரன்கள் வரை எதிர்பார்த்தோம். ஆனால், நாங்கள் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.
240 ரன்கள்தான் அடித்திருக்கும்போது, விக்கெட்டை வீழ்த்தி விரும்ப வேண்டும். ஆனால் டிராவிஸ் ஹெட், லபுஷேன் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து, போட்டியை எங்களிடம் இருந்து முற்றிலுமாக அவர்களுக்குரியதாக்கி விட்டனர்.
சேஸிங் செய்தபோது, ஆடுகள் பேட்ஸ்மேன்களுக்கு சற்று கூடுதல் சாதகமாக இருந்தது. நான் எந்தவித சாக்குபோக்கும் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் அதிக ரன்கள் அடிக்கவில்லை. 3 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினோம். இன்னும் வீழ்த்திருக்க வேண்டும். ஆனால், அந்த இருவரும் சிறப்பாக விளையாடினர்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.
- உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா புது சாதனை.
- முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிதானமாக ஆடியது.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் துவக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்களை குவித்து அசத்தினார். இதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் அடங்கும்.

இன்றைய இறுதிப் போட்டியில் 151.61 எனும் அதிரடி ரன்ரேட்டில் விளையாடி வந்த ரோகித் சர்மா மேக்ஸ்வெல் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் இடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்தார். நடப்பு உலகக் கோப்பை 2023 தொடரின் மற்ற போட்டிகளை போன்றே, இன்றைய போட்டியிலும் ரோகித் சர்மா அபார துவக்கத்தை கொடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
இதன் மூலம் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார். இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ரோகித் மூன்று சிக்சர்களை விளாசினார். இதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே 87 சிக்சர்களை அடித்துள்ளார்.

முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக கிரிஸ் கெயில் 85 சிக்சர்களை அடித்ததே, ஒரு அணிக்கு எதிராக ஒரு வீரர் அடித்த அதிக சிக்சர்கள் என்ற சாதனையாக இருந்து வந்தது. இன்றைய போட்டியின் மூலம் ரோகித் சர்மா இந்த சாதனையை முறியடித்து, ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த சாதனை மட்டுமின்றி ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர், கேப்டனாக உலகக் கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர், உலகக் கோப்பை தொடரில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த வீரர் போன்ற சாதனைகளையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரின் 11 போட்டிகளில் ரோகித் சர்மா மொத்தமாக 597 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி ரன்கள் 54.27 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 125.94 ஆகவும் இருந்துள்ளது. இதில் ஒரு சதம், 3 அரைசதங்கள் அடங்கும். இதில் ரோகித் சர்மா 31 சிக்சர்களை விளாசி இருக்கிறார்.