செய்திகள்

ரோகித், குல்தீப் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும்- கவாஸ்கர்

Published On 2018-07-14 13:05 GMT   |   Update On 2018-07-14 13:05 GMT
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா, குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #EGNvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான டி20 கிரிக்டெக் தொடர் முடிவடைந்து தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இது முடிந்த பின்னர் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

டி20 தொடரின் கடைசி போட்டியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அதேபோல் குல்தீப் யாதவ் முதல் போட்டி ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அசத்தல் சதம் அடித்தார். குல்தீப் யாதவ் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

இருவரும் நல்ல பார்மில் உள்ளதால் இருவரையும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்த்து, ஆடும் லெவனில் விளையாட வைக்க வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #ENGvIND #KuldeepYadav #SunilGavaskar #RohitSharma
Tags:    

Similar News