செய்திகள்

இன்ஸ்டாகிராமில் கோலி அக்கவுண்ட் அதிகமாக செயல்பாட்டில் உள்ள கணக்காக தேர்வு

Published On 2018-03-20 11:28 GMT   |   Update On 2018-03-20 11:28 GMT
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுக்கு விருது கிடைத்துள்ளது. #ViratKohli
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி விளையாட்டில் மட்டுமல்ல, விளம்பரங்களிலும் முன்னணி நபராக திகழ்ந்து வருகிறார். மேலும் சமூக இணைய தளங்களில் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் உள்ளது.

இவர் இன்ஸ்டாகிராமில் virat.kohli என்ற பெயரில் அக்கவுண்ட் வைத்துள்ளார். இந்த அக்கவுண்ட் ‘அதிகமாக செயல்பாட்டில் உள்ள கணக்கு (most engaging account)’ என இன்ஸ்ராகிராம் நிறுவனம் முதன்முறையாக இந்தியாவில் விராட்கோலிக்கு இந்த விருதை அறிவித்துள்ளது.

விராட் கோலி கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி இன்ஸ்டாகிராமில் இணைந்தார். தற்போதுவரை கோலியை 19.8 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். இதுதான் மிகவும் அதிகமான ரசிகர்களை கொண்டது இல்லை என்றாலும், அதிகமான கமண்ட் மற்றும் லைக்ஸை குவித்த அக்கவுண்டாக உள்ளது.

முதன்முறையாக 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் அடிலெய்டில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததை பதிவு செய்திருந்தார். தற்போதுவரை 484 கருத்துக்கள் மற்றும் படங்களை பதிவு செய்துள்ளார்.



சமீபத்தில் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் அனுஷ்கா ஷர்மா உடன் நடைபெற்ற திருமணம் படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்திருந்தார். கோலி சமீபத்தில் தனது மனைவி அனுஷ்காவுடன் உள்ள படத்தை வெளியிட்டிருந்தார். இதற்கு 28 லட்சத்து 2 ஆயிரத்து 412 லைக்குகளும், 14927 கருத்துக்களும் பதிவாகியிருந்தன.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே 22.4 மில்லியன் ரசிகர்களும், பிரியங்கா சோப்ராவை 22 மில்லியன் ரசிகர்களும், ஆலியா பட்டை 20.8 மில்லியன் ரசிகர்களும் பின்தொடர்கிறார்கள்.
Tags:    

Similar News