செய்திகள்

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதி போட்டியில் பிவி சிந்து தோல்வி

Published On 2018-03-17 18:52 GMT   |   Update On 2018-03-17 18:52 GMT
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் அகனே யமகுச்சியிடம் தோல்வியடைந்து வெளியேறினார். #AllEnglandOpen2018 #PVSindhu #AkaneYamaguchi
லண்டன்:

நூற்றாண்டு கால பழமையும், கவுரவமும் மிக்க ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து, ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை சிந்து 21-19 என கைப்பற்றினார். அடுத்த செட்டை யமகுச்சி 21-19 என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டில் இருவரும் அதிரடியாக விளையாடி மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இருப்பினும் இறுதியில் யமகுச்சி 21-18 என மூன்றாவது செட்டை கைப்பற்றினார். இதன்மூலம் 19-21, 21-18, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற யமகுச்சி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பி.வி.சிந்து தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறினார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் சீன தைபேவின் தாய் சூ யிங், சீனாவின் யூபே சென்னை 21-15, 20-22, 21-13 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் யமகுச்சி - தாய் சூ யிங் ஆகியோர் பலப்பரீட்சை செய்ய உள்ளனர். #AllEnglandOpen2018 #PVSindhu #AkaneYamaguchi
Tags:    

Similar News