செய்திகள்

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: அரைஇறுதியில் யுகி பாம்ப்ரி

Published On 2018-02-16 05:48 GMT   |   Update On 2018-02-16 05:48 GMT
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி ஜப்பான் வீரரான யசுதகா உஷியமாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
சென்னை:

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதியில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் யசுதகா உஷியமாவை (ஜப்பான்) வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார்.

இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-விஷ்ணுவர்தன் ஜோடி 6-3, 7-5 என்ற நேர்செட்டில் சகெத் மைனெனி (இந்தியா)-லூகா மார்காரோலி (சுவிட்சர்லாந்து) இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஸ்ரீராம் பாலாஜி-விஷ்ணுவர்தன் இணை, செம் இல்கெல் (துருக்கி)- டானிலோ பெட்ரோவிச் (செர்பியா) ஜோடியை சந்திக்கிறது.
Tags:    

Similar News