செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: கெய்ல் அணிக்கு திரும்பியது கூடுதல் பலம் - ஹோல்டர்

Published On 2017-09-19 07:47 GMT   |   Update On 2017-09-19 07:48 GMT
வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடரில் அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல் இடம் பெற்றுள்ளது கூடுதல் பலம் என வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கூறியுள்ளார்.
வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்கியது. சம்பள பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அணியில் ஓரம் கட்டப்பட்டு இருந்த அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல், சாமுவேல்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கூறியதாவது:-

கிறிஸ்கெய்ல் அணிக்கு திரும்பியது உண்மையிலேயே கூடுதல் பலமாகும். எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவரது ஆட்டம் இருக்கும். அவர் அணியில் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் சமீபத்தில் நடந்த கரீபியன் ‘லீக்’ போட்டியில் சிறப்பாக விளையாடினார். அவரிடமிருந்து ஆலோசனைகளை பெற்று முன்னேறி செல்வோம் என்றார்.
Tags:    

Similar News