செய்திகள்

சின்சினாட்டி ஓபன்: காலிறுதியில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி

Published On 2017-08-19 18:23 GMT   |   Update On 2017-08-19 18:23 GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான ரபேல் நடால் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

நியூயார்க்:

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இன்று (19-ம் தேதி) நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் முதல்நிலை வீரரான ரபேல் நடால், 22 வயதான ஆஸ்திரேலியாவின் நிக் கிரைகோஸை எதிர்கொண்டார்.

நிக் கிரைகோஸ் முந்தைய போட்டியில் மூன்றாம் நிலை வீரர் டோம்னிக் தெய்மை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றார்.

சென்ற போட்டியைப் போல இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடிய கிரைகோஸ் 6-2, 7-5 என்ற நேர் செட்களில் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார். கிரைகோஸ் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயினின் டேவிட் பெரரை எதிர்கொள்ள இருக்கிறார்.





இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் நான்காம் நிலை வீராங்கனையான முகுருஷா, முதல்நிலை வீராங்கனையான பில்ஸ்கோவாவை 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.


Tags:    

Similar News