செய்திகள்

பல்கேரியன் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் லக்‌ஷியா சென்

Published On 2017-08-17 20:15 GMT   |   Update On 2017-08-17 20:15 GMT
பல்கேரியன் ஒபன் பேட்மிண்டன் தொடரின் ஜூனியர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷியா சென் வெற்றி பெற்று சாம்பியம் பட்டத்தை தட்டிச் சென்றார்.

சோபியா:

பல்கேரியன் ஒபன் பேட்மிண்டன் தொடரின் ஜூனியர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷியா சென் வெற்றி பெற்று சாம்பியம் பட்டத்தை தட்டிச் சென்றார்.

பல்கேரியன் ஒபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பல்கேரியாவின் சோபியா நகரில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இறுதிப்போட்டிகள் நேற்று (17-ம் தேதி) நடைபெற்றது.

இத்தொடரின் ஜூனியர் ஆடவர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த முதல்நிலை வீரரான லக்‌ஷியா சென் தகுதிப் பெற்றார். 57 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டியில் இரண்டாம் நிலை வீரரான குரோசியாவின் ஜொன்னிமிர் டர்கின்ஜாக், லக்‌ஷியா சென் எதிர்கொண்டார்.

இப்போட்டியின் முதல் சுற்றை 21-18 என்ற புள்ளிக்கணக்கில் டர்கின்ஜாக் கைப்பற்றினார். அதன்பின் சுதாரித்துக்கொண்ட லக்‌ஷியா சென் சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டினார். இரண்டாவது சுற்றை 21-12 என்ற புள்ளிக்கணக்கில் லக்‌ஷியா  கைப்பற்றினார். இதன்மூலம் வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதிசுற்றுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இறுதி சுற்றையும் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 21-17 என்ற புள்ளிக்கணக்கில் லக்‌ஷியா வென்று ஜூனியர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
Tags:    

Similar News