செய்திகள்

பல்லேகெலே டெஸ்ட்: இலங்கை அணியில் துஷ்மந்தா சமீரா, லஹிரு காமேஜ் சேர்ப்பு

Published On 2017-08-10 11:09 GMT   |   Update On 2017-08-10 11:09 GMT
பல்லேகெலேயில் சனிக்கிழமை தொடங்கும் 3-வது டெஸ்டிற்கான இலங்கை அணியில் துஷ்மந்தா சமீரா, லஹிரு காமேஜ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்வடைந்துள்ள இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் இருக்கிறது.


லஹிரி காமேஜ்

3-வது மற்றும் கடைசி போட்டி சனிக்கிழமை பல்லேகெலேயில் தொடங்குகிறது. இலங்கை அணியின் ஹெராத், பிரதீப் காயம் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் 3-வது போட்டியில் இருந்து ஹெராத், பிரதீப் மற்றும் குணதிலகா ஆகியோர் நீக்கப்பட்டு துஷ்மந்தா சமீரா, லஹிரு காமேஜ் ஆகியோர் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜடேஜாவிற்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக அக்சார் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News