செய்திகள்

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் முதல் வெற்றி பெறுமா?

Published On 2017-08-04 08:32 GMT   |   Update On 2017-08-04 08:32 GMT
புரோ கபடி லீக் தொடரில், பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோத இருக்கும் தமிழ் தலைவாஸ், தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா? என்று எதிர்பாக்கப்படுகிறது.
நாக்பூர்:

12 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் புரோ கபடி லீக் போட்டி நடந்து வருகிறது. இதில் சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சிடம் 27-32 என்ற புள்ளி கணக்கில் தோற்றது.

இன்று தமிழ் தலைவாஸ் தனது 2-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் வென்று முதல் வெற்றியை பெறும் முனைப்பில் தமிழ் தலைவாஸ் உள்ளது.

இரவு 9 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன்-தபாஸ் டெல்லி அணிகள் மோதுகின்றன.
Tags:    

Similar News