search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூர் புல்ஸ்"

    புரோ கபடி லீக்கில் இன்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் குஜராத்தை 41 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #ProKabaddiLeague #GujaratFortuneGiants #BengaluruBulls
    கொச்சி:

    6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே ஆப்ஸ் சுற்று) முன்னேறின.
     
    நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் உ.பி. யோதா 34 - 29 என்ற புள்ளிக்கணக்கில யு மும்பாவை தோற்கடித்தது. மற்றொரு சுற்றில் தபாங் டெல்லி 39 - 28 என்ற புள்ளிக்கணக்கில் பெங்காலை விரட்டியது. அதன்மூலம் யு மும்பா, பெங்கால் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு கொச்சியில் நடைபெற்றது. இதில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த குஜராத் - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் அதிரடியாக ஆடினர். முதலில், குஜராத் அணி வீரர்கள் சிறப்பாக ஆடியதால் முதல் பாதியில் 14 - 13 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது.

    ஆனால், இரண்டாவது பாதியில் பெங்களூரு அணி அபாரமாக ஆடியது. இதனால் ஆட்டத்தின் முடிவில் 41 - 29 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் தோற்ற குஜராத் அணி 2-வது தகுதி சுற்றில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddiLeague #GujaratFortuneGiants #BengaluruBulls
    புரோ கபடி லீக்கில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #ProKabaddiLeague
    கொச்சி:

    6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்ஸ் சுற்று) முன்னேறின.

    பிளே-ஆப்ஸ் சுற்று நேற்று தொடங்கியது. இதில் முதலாவது வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) உ.பி. யோத்தா 34 - 29 என்ற புள்ளி கணக்கில யு மும்பாவை தோற்கடித்தது.

    இதேபோல் இன்னொரு வெளியேற்றுதல் சுற்றில் தபாங் டெல்லி 39 - 28 என்ற புள்ளி கணக்கில் பெங்காலை விரட்டியது. அதன்மூலம் யு மும்பா, பெங்கால் வெளியேற்றப்பட்டன.

    இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு கொச்சியில் நடக்கிறது. இதில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த குஜராத் - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    குஜராத் அணியில் சுனில் குமார், அஜய்சமார் பிரபஞ்சன் போன்ற வீரர்கள் உள்ளனர். இருஅணிகளும் 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் முனைப்பில் உள்ளன.

    பெங்களூர் அணியில் கேப்டன் ரோகித்குமார் முதுகெலும்பாக உள்ளார். முதல் தகுதி சுற்றில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

    தோற்கும் அணி 2-வது தகுதி சுற்றில் விளையாடும். அதனால் இன்றைய போட்டியிலேயே வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் அணிகளும் உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    இரவு 9 மணிக்கு நடக்கும் 3-வது வெளியேற்றுதல் சுற்றில் உ.பி. யோத்தா - தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி 2-வது தகுதி சுற்றில் விளையாடும்.
    புரோ கபடி லீக் போட்டியில் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றனர். #ProKabaddi2018 #BengalWarriors #BengaluruBulls
    புனே:

    புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் புனே அணி 35-33 என்ற புள்ளிக் கணக்கில் (‘ஏ’ பிரிவு) அரியானா ஸ்டீலர்சையும், பெங்களூர் புல்ஸ் 34-26 என்ற கணக்கில் (‘பி’ பிரிவு) தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 87-வது ‘லீக்‘ ஆட்டத்தில் புனேரிபல்தான்- குஜராத் பார்ச்சுன் ஜெய்மைட்ஸ் அணிகள் மோதுகின்றன. புனே அணி 8-வது வெற்றிக்காகவும், குஜராத் அணி 11-வது வெற்றிக்காகவும் காத்திருக்கிறது.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூர் அணி 11-வது வெற்றி ஆர்வத்தில் இருக்கிறது. பெங்கால் வாரியர்ஸ் 7-வது வெற்றி வேட்கையில் இருக்கிறது. #ProKabaddi2018 #BengalWarriors #BengaluruBulls
    ×