search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "qulalifier 1"

    புரோ கபடி லீக்கில் இன்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் குஜராத்தை 41 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #ProKabaddiLeague #GujaratFortuneGiants #BengaluruBulls
    கொச்சி:

    6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே ஆப்ஸ் சுற்று) முன்னேறின.
     
    நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் உ.பி. யோதா 34 - 29 என்ற புள்ளிக்கணக்கில யு மும்பாவை தோற்கடித்தது. மற்றொரு சுற்றில் தபாங் டெல்லி 39 - 28 என்ற புள்ளிக்கணக்கில் பெங்காலை விரட்டியது. அதன்மூலம் யு மும்பா, பெங்கால் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு கொச்சியில் நடைபெற்றது. இதில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த குஜராத் - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் அதிரடியாக ஆடினர். முதலில், குஜராத் அணி வீரர்கள் சிறப்பாக ஆடியதால் முதல் பாதியில் 14 - 13 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது.

    ஆனால், இரண்டாவது பாதியில் பெங்களூரு அணி அபாரமாக ஆடியது. இதனால் ஆட்டத்தின் முடிவில் 41 - 29 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் தோற்ற குஜராத் அணி 2-வது தகுதி சுற்றில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddiLeague #GujaratFortuneGiants #BengaluruBulls
    ×