செய்திகள்

மிதாலியின் நிறைவேறாத ஆசை

Published On 2017-07-24 03:17 GMT   |   Update On 2017-07-24 03:17 GMT
இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலிராஜிக்கு இதுவே கடைசி உலக கோப்பை போட்டியாகும். அதனால் அவரது உலக கோப்பை ஆசை, கடைசி வரை கனவாகவே போய் விட்டது.
இந்திய கேப்டன் மிதாலிராஜ் 2005-ம் ஆண்டு இந்திய அணியை இறுதி ஆட்டத்திற்கு அழைத்து சென்றார். அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. 2-வது முறையாக இப்போதும் அவரது தலைமையில் இந்திய படை இறுதிப்போட்டிக்கு வந்திருந்தது. வெற்றியின் விளிம்புக்கு வந்தும் இறுதியில் கோப்பையை கோட்டை விட்டது.

                            தோல்வி ஏமாற்றத்தில் இந்திய வீராங்கனைகள்

34 வயதான மிதாலிராஜிக்கு இதுவே கடைசி உலக கோப்பை போட்டியாகும். அதனால் அவரது உலக கோப்பை ஆசை, கடைசி வரை கனவாகவே போய் விட்டது. இந்தியா மட்டுமல்ல, இதுவரை எந்த ஆசிய அணியும் பெண்கள் உலக கோப்பையை உச்சிமுகர்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News