search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிதாலி ராஜ்"

    • விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர்.
    • மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.80 கோடிக்கு எடுத்துள்ளது.

    149 போட்டிகளில் விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 2992 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 8 ரன்கள் எடுத்தபோது 3 ஆயிரம் ரன்களை எடுத்தார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 3 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 150 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இந்த ரன்களை கடந்திருக்கிறார். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர்.

    33 வயதாகும் ஹர்மன்ப்ரீத் கவுர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்சமாக 103 ரன்களை எடுத்துள்ளார். இது எந்தவொரு இந்திய வீராங்கனையும் செய்யாத சாதனையாகும். இதேபோன்று சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்சர்களை (70) அடித்த வீராங்கனை என்ற ரிக்கார்டையும் அவர் ஏற்படுத்தியுள்ளார்.

    இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் டி20 உலகக்கோப்பை தொடரில் 13 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தார். இந்த சாதனையையும் ஹர்மன்ப்ரீத் கவுர் (14) முறியடித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து அனைத்து டி20 உலகக்கோப்பை போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர். மொத்தம் 34 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 500 ரன்களை எடுத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.80 கோடிக்கு எடுத்துள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் மார்ச் 4ஆம் தேதி தொடங்கவுள்ளது.

    • மிதாலி ராஜ் சர்வதேச போட்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
    • மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் நம் இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டிய அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுனர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    23 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி மிளிரச் செய்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீராங்கனையுமான மிதாலி ராஜ் சர்வதேச போட்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் நம் இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டிய அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கொரோனா கால கட்டத்தில் தெலுங்கானா ராஜ்பவனுடன் இணைந்து புலம்பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவளித்து தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியதை இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    தேசிய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு அப்ளிகேசன் வெளியிட்டுள்ள நிலையில், ரமேஷ் பவாருக்கு ஆதரவாக வீராங்கனைகள் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளனர். #BCCI #RameshPowar
    இந்திய தேசிய பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் செயல்பட்டு வந்தார். இவரது தலைமையில் இந்திய பெண்கள் அணி வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை எதிர்கொண்டது.

    அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்து வெளியேறியது. லீக் போட்டியின்போது இரண்டு போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகி விருது பெற்ற மிதாலி ராஜ் அரையிறுதியில் சேர்க்கப்படவில்லை. இதற்கு காரணம் ரமேஷ் பவாருக்கும், மிதாலி ராஜிற்கும் இடையில் நடைபெற்ற மோதல்தான் காரணம் என்று கூறப்பட்டது.

    இதற்கிடையில் நவம்பர் 30-ந்தேதியுடன் ரமேஷ் பவார் பதவிக்காலம் முடிவடைந்தது. அன்று மாலையே பயிற்சியாளர் பதவிக்கு விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ செய்தி வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில் பெண்கள் அணியின் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆன ஹர்மன்ப்ரீத் கவும், மற்றொரு வீராங்கனை மந்தனா ஆகியோர் மீண்டும் ரமேஷ் பவாருக்கு பதவி வழங்குங்கள் என்று பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளனர்.
    மிதாலி ராஜ் விவகாரத்தில் ரமேஷ் பவாரை நீக்கியதுபோல், ரவி சாஸ்திரியை நீக்குவீர்களா? என்று மதன் லால் கேள்வி எழுப்பியுள்ளார். #TeamIndia
    வெஸ்ட் இண்டீஸில் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அனுபவம் வாய்ந்த மூத்த வீராங்கனையான மிதாலி ராஜ் தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகி விருதை தட்டிச் சென்றார்.

    அரையிறுதிக்கு முந்தைய போட்டியில் காயத்தால் களம் இறங்கவில்லை. அதன்பின் காயம் சரியான பின்பும் அரையிறுதி போட்டியில் களம் இறக்கப்படவில்லை. இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் விமர்சனம் எழும்பியது. அப்போதுதான் பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கும் மிதாலி ராஜிற்கும் இடையில் இருந்த மோதல் வெளிச்சத்திற்கு வந்தது.

    இந்த விவகாரத்திற்கிடையே, நேற்று முன்தினத்துடன் ரமேஷ் பவாரின் பதவிகாலம் முடிவடைந்தது. அதற்குள் தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிட்டது.

    இந்நிலையில் இந்திய ஆண்கள் தேசிய அணியில் ரவி சாஸ்திரி ஒரு வீரரை வெளியே உட்கார வைத்துவிட்டார் என்பதற்கு, அவரை பதவியில் இருந்து நீக்கிவிடுவீர்களா? என்று முன்னாள் வீரர் மதன்லால் கேள்வி எழுப்பிள்ளார்.



    இதுகுறித்து மதன் லால் கூறுகையில் ‘‘நீங்கள் பயிற்சியாளரை நீக்கினால், அவர் டம்மியானவர் என வீரர்கள் நினைக்க தோன்றிவிடும். பயிற்சியாளர் அணியின் ஒரு பகுதி. அவருடன் எடுக்கப்படும் முடிவுகளை அணி பின்பற்ற வேண்டும். ரமேஷ் பவார் எப்போதுமே அணி வெற்றி பெற வேண்டும் என்றுதான் விரும்புவார். ஹர்மன்ப்ரீத் கவுர் அதில் ஒரு பகுதி. அப்படி இருக்கையில் ரமேஷ் பவார் மற்றும் ஏன் டார்கெட்? செய்யப்படுகிறார். தேர்வாளர்களும் அதில் ஒரு பகுதிதான். பவாரை நீக்கியது தேவையில்லாதது. இப்படிபட்ட விஷயத்தால் ஆட்டம் முன்னோக்கிச் செல்லாது.

    நாளை ரவி சாஸ்திரி யாரவது ஒரு வீரரை வெளியில் உட்கார வைத்துவிட்டா், நீங்கள் அவரை பதவியில் இருந்த நீக்குவீர்களா?. அது நடக்காத விஷயம். பயிற்சியாளர்கள் எப்போதுமே நெருக்கடிக்குள் இருப்பவர்கள்’’ என்றார்.
    ×