செய்திகள்
மாநில ஊசூ போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள்
மாநில ஊசூ (தற்காப்பு கலை) ஜூனியர் பிரிவு போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் பி.ஹரிஸ் 3 தங்கப்பதக்கமும், பி.அருண்குமார் 2 தங்கப்பதக்கமும், ஆர்.ரிஷிகுமார் ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
திண்டுக்கல் :
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2016-17-ம் ஆண்டுக்கான மாநில ஊசூ (தற்காப்பு கலை) போட்டி கோவையில் கடந்த 10, 11-ந் தேதிகளில் நடந்தது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஜூனியர் பிரிவு போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் பி.ஹரிஸ் 3 தங்கப்பதக்கமும், பி.அருண்குமார் 2 தங்கப்பதக்கமும், ஆர்.ரிஷிகுமார் ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதேபோல சீனியர் பிரிவில் கலந்து கொண்ட மாணவர்கள் எஸ்.அரவிந்த் ஸ்ரீராம், எஸ்.கிஷோர்குமார், வி.சீனிவாசன் ஆகியோர் 3 தங்கப்பதக்கம் மற்றும் 5 வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
சாதனை படைத்த வீரர்களை, மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் பாராட்டி கவுரவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, மாவட்ட விளையாட்டு அலுவலர் சவுந்தரராஜன், ஊசூ பயிற்சியாளர் சாலமன் சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2016-17-ம் ஆண்டுக்கான மாநில ஊசூ (தற்காப்பு கலை) போட்டி கோவையில் கடந்த 10, 11-ந் தேதிகளில் நடந்தது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஜூனியர் பிரிவு போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் பி.ஹரிஸ் 3 தங்கப்பதக்கமும், பி.அருண்குமார் 2 தங்கப்பதக்கமும், ஆர்.ரிஷிகுமார் ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதேபோல சீனியர் பிரிவில் கலந்து கொண்ட மாணவர்கள் எஸ்.அரவிந்த் ஸ்ரீராம், எஸ்.கிஷோர்குமார், வி.சீனிவாசன் ஆகியோர் 3 தங்கப்பதக்கம் மற்றும் 5 வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
சாதனை படைத்த வீரர்களை, மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் பாராட்டி கவுரவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, மாவட்ட விளையாட்டு அலுவலர் சவுந்தரராஜன், ஊசூ பயிற்சியாளர் சாலமன் சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.