செய்திகள்

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி: நாகர்கோவில் அணி சாம்பியன்

Published On 2017-06-20 03:09 GMT   |   Update On 2017-06-20 03:09 GMT
மாநில அளவிலான ஐவர் கால்பந்து இறுதிப்போட்டியில் நாகர்கோவில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
திண்டுக்கல் :

திண்டுக்கல் அருகேயுள்ள தோட்டனூத்தில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. ஸ்டார் கால்பந்து கழகம் சார்பில் நடந்த இந்த போட்டியில் திண்டுக்கல், சென்னை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்றன. இதில் திண்டுக்கல் நண்பர்கள் கால்பந்து அணியும், நாகர்கோவில் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

பின்னர் நடந்த இறுதிப்போட்டியில் நாகர்கோவில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி முன்னாள் மாணவர்கள் அணி 3-வது இடத்தை பிடித்தது. சாம்பியன் பட்டம் பெற்ற நாகர்கோவில் அணிக்கு பரிக்கோப்பையுடன் ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசும், 2-வது இடம்பிடித்த திண்டுக்கல் அணிக்கு பரிசுக்கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

இந்த பரிசுகளை சுரபி கல்லூரி தலைவர் ஜோதிமுருகன், மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவர் யூசுப் அன்சாரி ஆகியோர் வழங்கினர். கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை ஸ்டார் கால்பந்து கழக செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் வீரர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News