செய்திகள்
பாகிஸ்தான் கேப்டனை விமர்சனம் செய்த ரசிகர்களுக்கு சவுக்கடி கொடுத்தார் சேவாக்
பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஆங்கில பேச்சு திறமை குறித்து விமர்சனம் செய்த ரசிகர்களுக்கு இந்திய முன்னாள் வீரர் சேவாக் சவுக்கடி கொடுத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்து பின்னர், சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, இங்கு இருப்பவர்கள் எல்லாம் ஆங்கில ஊடகங்களை சார்ந்தவர்களா? என்று கேட்டார்.
சர்பிராஸ் அகமதுவால் ஆங்கிலம் சரளமாக பேச இயலாது. இதனால்தான் அப்படி கேட்டார். சர்பிராஸ் அப்படி கேட்டதால், சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சனம் செய்தனர்.
இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சர்பிராஸ் அஹமது ஆங்கிலத்தில் பேசவில்லை என்று விமர்சனம் செய்வது பைத்தியக்காரத்தனம். அவருடைய வேலை விளையாடுவது. அதை சிறப்பாக செயல்பட்டு அணியை இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றுள்ளார்’’ என பதிவு செய்து ரசிகர்களின் வாயை அடைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, இங்கு இருப்பவர்கள் எல்லாம் ஆங்கில ஊடகங்களை சார்ந்தவர்களா? என்று கேட்டார்.
சர்பிராஸ் அகமதுவால் ஆங்கிலம் சரளமாக பேச இயலாது. இதனால்தான் அப்படி கேட்டார். சர்பிராஸ் அப்படி கேட்டதால், சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சனம் செய்தனர்.
இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சர்பிராஸ் அஹமது ஆங்கிலத்தில் பேசவில்லை என்று விமர்சனம் செய்வது பைத்தியக்காரத்தனம். அவருடைய வேலை விளையாடுவது. அதை சிறப்பாக செயல்பட்டு அணியை இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றுள்ளார்’’ என பதிவு செய்து ரசிகர்களின் வாயை அடைத்துள்ளார்.