search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்பராஸ் அகமது"

    லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 54 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து 4-0 எனத் தொடரை கைப்பற்றியது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

    2-வது, 3-வது மற்றும் நான்காவது போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த மூன்று போட்டிகளிலும் இரண்டு அணிகளும் 300 ரன்களுக்கு மேல் குவித்தனர். இங்கிலாந்து இரண்டு முறை சேஸிங் செய்தது. ஒருமுறை 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 73 பந்தில் 84 ரன்களும், மோர்கன் 64 பந்தில் 76 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. கிறிஸ் வோக்ஸ் தொடக்கத்தில் அபாரமாக பந்து வீச பாகிஸ்தான் 6 ரன்கள் அடிப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் உடன் கேப்டன் சர்பராஸ் அகமது ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.



    பாபர் ஆசம் 80 ரன்கள் சேர்த்தார். சர்பராஸ் அகமது 80 பந்தில் 97 ரன்கள் குவித்து சதத்தை தவறவிட்டார். சர்பராஸ் அகமது ஆட்டமிழக்கும்போது பாகிஸ்தான் 31.5 ஓவரில் 193 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த வீரர்கள் முடிந்த அளவிற்கு அடித்து விளையாடினார்கள். ஆசிப் அலி 22 ரன்னும், இமாத் வாசிம் 25 ரன்களும், முகமது ஹஸ்னைன் 28 ரன்களும் சேர்க்க பாகிஸ்தான் 46.5 ஓவரில் 297 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

    இதனால் இங்கிலாந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரை 4-0 எனவும் கைப்பற்றியது. இந்தத் தொடரில் 8 இன்னிங்சில் 7 முறை 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன் அவரை ஆதரித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஊக்கப்படுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். #SarfrazAhmed #SouravGanguly
    புதுடெல்லி :

    14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குரூப் பிரிவு ஆட்டத்திலும் பாகிஸ்தான் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்தது.

    இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்களில் சிலர் கூறும்போது, நான் ஒருவனே இந்திய வீரர்களின் 10 விக்கெட்டையும் கைப்பற்றுவேன், கோலி இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவு என வெற்று வாய் சவடால் விட்டனர். ஆனால் நிஜத்தில் நடந்ததோ வேறு, இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளையும் சேர்த்து அவர்கள் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளனர்.

    மேலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் போராடி கடைசி ஓவரில் தான் வெற்றி பெற்றனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி வீரர்கள் மீதும், கேப்டன் சர்பராஸ் அகமது மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சர்பராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன் என புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

    சர்பிராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன், அவரை போன்ற வீரர்கள் தினம் தினம் பிறந்து வர மாட்டார்கள். கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை அப்பழுக்கற்ற முறையில் சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வென்ற அவர் ஒரு தைரியமான வீரர்.

    ஆசிய கோப்பை தோல்விகளால் அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எல்லாம் புறம்தள்ளிவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், முன்னாள் வீரர்களும் சேர்ந்து அவரை ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும் என கங்குலி கூறினார். #SarfrazAhmed #SouravGanguly
    ×