செய்திகள்

லோதா கமிட்டி பரிந்துரை: கிரிக்கெட் வாரியத்திடம் மாநில சங்கங்கள் அவகாசம்

Published On 2017-03-01 09:21 GMT   |   Update On 2017-03-01 09:21 GMT
லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் மாநில சங்கங்கள் அவகாசம் கேட்டுள்ளன.
லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த தவறியதால் கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டில் பொறுப்பில் இருந்து நீக்கியது.

இதை தொடர்ந்து கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க வினோத்ராய் தலைமையில் நிர்வாக குழு (சி.ஒ.ஏ) அமைக்கப்பட்டது.

லோதா குழு பரிந்துரையை அமல்படுத்தியதற்கான அறிக்கையை இன்று (மார்ச் 1-ந்தேதி) தாக்கல் செய்யுமாறு அனைத்து மாநில சங்கங்களுக்கும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதற்கிடையே இந்த கால அவகாசத்தை மார்ச் 27-ந்தேதி வரை நீட்டிக்குமாறு பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாக குழுவை கேட்டுள்ளன.

Similar News