செய்திகள்

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா நேவால்

Published On 2017-01-20 12:40 GMT   |   Update On 2017-01-20 12:40 GMT
மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நேவால் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

பேட்மிண்டன் உலகத் தரவரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான சாய்னா நேவால் மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றில் இந்தோனேசியாவின் பிட்ரியனியை எதிர்கொண்டார்.

சுமார் 40 நிமிடம் நடைபெற்ற இந்த போட்டியில் சாய்னா 21-15, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதனையடுத்து சாய்னா தனது அரையிறுதி போட்டியில், ஹாங்காங்கின் யிப் பியி யின்னை எதிர் கொள்ள உள்ளார். யிப் உடன் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் சாய்னா 6-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறார்.

இதனிடையே, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஜய் ஜெயராம் இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகா ஜிண்டிங்கிடம் 21-13, 21-8 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவினார்.

Similar News