இந்தியா

வெங்கையா நாயுடு

அரசின் கொள்கைகள் பற்றிய தகவல் மக்களுக்கு அவர்களின் தாய்மொழியில் அளிக்கப்பட வேண்டும்- வெங்கையா நாயுடு

Published On 2022-08-09 18:22 GMT   |   Update On 2022-08-10 00:16 GMT
  • இலவச திட்டங்கள் பல மாநிலங்களின் நிதி நிலை மோசமடைய வழி வகுத்தது.
  • மக்களின் எதிர்பார்ப்புகளை சரியான நேரத்தில் நிறைவேற்ற வேண்டும்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நாளை ஓய்வு பெறுகிறார். முன்னதாக குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் தம்மை சந்திக்க வந்த இந்திய தகவல் சேவை அதிகாரிகள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

ஒவ்வொரு கட்டத்திலும் அரசின் கொள்கை உருவாக்கம் மற்றும் அமலாக்கம் மக்கள் பங்கேற்புடன் இரு வழி செயல் முறையாக இருக்க வேண்டும். அரசுகளுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் தகவல் தொடர்புத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. 


ஜனநாயகத்தில், அரசின் கொள்கைகள் மற்றும் முன் முயற்சிகள் பற்றிய தகவலை சரியான நேரத்தில் மக்களுக்கு அவர்களின் தாய்மொழியில் அளிக்கப்பட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களைப் பாகுபாடின்றி சரியான நேரத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்.

வாக்குகளைப் பெறுவதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் கவர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கின்றன. இது போன்ற இலவச திட்டங்கள் பல மாநிலங்களின் நிதி நிலையை மோசமடைய வழிவகுத்தது. ஏழை மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு அரசு நிச்சயமாக ஆதரவளிக்க வேண்டும்,

ஆனால் அதே நேரத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களுடனான சந்திப்பின்போது நான் நிறைய கற்றுக்கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News