இந்தியா

தெலுங்கானாவில் காரில் கொண்டு சென்ற 13 கிலோ தங்கம் பறிமுதல்

Published On 2024-03-20 10:05 GMT   |   Update On 2024-03-20 10:05 GMT
  • போலீசார் காரில் வந்த 3 பேரையும் கைது செய்து தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
  • பிடிபட்டவர்களிடம் நகைகள் எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து கம்மம் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது ஐதராபாத் அடுத்த மரியால குடாவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

காரில் 13 கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. காரில் இருந்தவர்களிடம் நகைக்கு உண்டான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து போலீசார் காரில் வந்த 3 பேரையும் கைது செய்து தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ 5.75 கோடி என போலீசார் தெரிவித்தனர். பிடிபட்டவர்களிடம் நகைகள் எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News