இந்தியா

பிரதமரின் மிரட்டலுக்கு காங்கிரஸ் ஒருபோதும் பயப்படாது- ராகுல் காந்தி அதிரடி

Published On 2022-08-04 07:31 GMT   |   Update On 2022-08-04 08:12 GMT
  • ஹெரால்டு ஹவுஸின் அலுவலகத்திற்கு அமலாத்துறை இயக்குநரகம் சீல்.
  • நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன்.

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பிரதமர் மோடியின் மிரட்டலுக்கு காங்கிரஸ் ஒரு போதும் பயப்படாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஹெரால்டு ஹவுஸின் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை இயக்குநரகம் சீல் வைத்ததை அடுத்து, ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாராளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பேசியதாவது:-

நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. பரவாயில்லை.. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். அவர்கள் என்ன செய்தாலும் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன்.

எங்கள் மீது சில அழுத்தம் கொடுப்பதன் மூலம் எங்களை அமைதிப்படுத்த முடியும் என்று பாஜக அரசு நினைக்கிறது. ஆனால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் இந்த நாட்டிற்காக என்ன செய்கிறார்கள். ஜனநாயகத்துக்கு எதிராக அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அதற்கு எதிராக நிற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News