இந்தியா

கேரளாவில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

Published On 2022-06-06 05:12 GMT   |   Update On 2022-06-06 05:12 GMT
  • படித்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். இது பற்றி சக ஆசிரியர்கள் மாணவியிடம் விசாரித்தனர்.
  • 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ஆசிரியரை போலீசார் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மம்பாட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்சலாம்(வயது57).

அப்துல்சலாம் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது வகுப்பில் படித்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். இது பற்றி சக ஆசிரியர்கள் மாணவியிடம் விசாரித்தனர்.

அப்போது ஆசிரியர் அப்துல்சலாம் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக மாணவி கூறினார்.

இது பற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவம் பற்றி விசாரித்தனர். பின்னர் இது குறித்து நிலம்பூர் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் அப்துல்சலாம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News