இந்தியா

துணை ஜனாதிபதியாக தேர்வான ஜெகதீப் தன்கர் இன்று மாலை வெங்கையா நாயுடுவை சந்திக்கிறார்

Published On 2022-08-07 09:15 GMT   |   Update On 2022-08-07 09:15 GMT
  • வெங்கைய நாயுடுவை அழைப்பதற்காக தன்கர் இன்று மாலை ராஷ்டிரபதி நிவாஸ் செல்கிறார்.
  • நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது.

நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தலில் அவர் 528 வாக்குகளுடன் வெற்றிப் பெற்றார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி, ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜெகதீப் தன்கருக்கு, பதவியை நிறைவு செய்ய உள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜக்தீப் தங்கர், பதவி விலகும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை இன்று மாலை சந்திக்கிறார்.

வெங்கைய நாயுடுவை அழைப்பதற்காக தன்கர் இன்று மாலை ராஷ்டிரபதி நிவாஸ் செல்கிறார். நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாக தன்கர் பதவியேற்கிறார்.

Tags:    

Similar News