இந்தியா

பயங்கரவாத அச்சுறுத்தல்- உளவுத் துறை அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை

Published On 2022-11-09 10:51 GMT   |   Update On 2022-11-09 10:51 GMT
  • நாட்டின் உள்பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் குறித்த ஆலோசிக்கப்பட்டது.
  • மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, உளவுத் துறை இயக்குனர் தபன் டேகா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை கண்காணிக்க மத்திய புலனாய்வு அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள உளவுத் துறை அதிகாரிகளுடன் (ஐ.பி.) மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தினார். காலை 11 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கியது. மாலை வரை நடக்கிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், நாட்டின் உள்பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் குறித்த ஆலோசிக்கப்பட்டது. மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, உளவுத் துறை இயக்குனர் தபன் டேகா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News