இந்தியா

சந்திரயான்-3 திட்ட வெற்றி: இஸ்ரோவுக்கு ஐஸ்லாந்து நாட்டின் உயரிய பரிசு

Published On 2023-12-22 03:24 GMT   |   Update On 2023-12-22 03:24 GMT
  • இஸ்ரோ விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கி, அதில் இருந்து பிரக்யான் என்ற ரோவரை நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கி பல்வேறு ஆய்வுகளை செய்தது.
  • இஸ்ரோ சார்பில், ஐஸ்லாந்த் நாட்டுக்கான இந்திய தூதர் பி.ஷியாம் பரிசை பெற்றார்.

சென்னை:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென்துருவ ஆய்வுக்காக அனுப்பிய சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றது. இஸ்ரோ விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கி, அதில் இருந்து பிரக்யான் என்ற ரோவரை நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கி பல்வேறு ஆய்வுகளை செய்தது.

இதைத்தொடர்ந்து ஐஸ்லாந்து நாட்டின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம், இஸ்ரோவுக்கு '2023- லீப் எரிக்சன் லூனார்' என்ற உயரிய பரிசை வழங்கியது. இதனை இஸ்ரோ சார்பில், ஐஸ்லாந்த் நாட்டுக்கான இந்திய தூதர் பி.ஷியாம் பரிசை பெற்றார். இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத், இதற்கு நன்றி தெரிவித்து காணொளி செய்தியை அனுப்பினார்.

Tags:    

Similar News