இந்தியா

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 11,793 ஆக குறைந்தது

Published On 2022-06-28 04:46 GMT   |   Update On 2022-06-28 07:00 GMT
  • கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 9,486 பேர் நேற்று நலம் பெற்று வீடு திரும்பினர்.
  • நாடு முழுவதும் நேற்று 19,21,811 டோஸ்களும், இதுவரை 197 கோடியே 31 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 17,073 ஆக இருந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,793 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி உள்ளது.

அதிகபட்சமாக கேரளாவில் 3,206 பேருக்கு தொற்று உறுதியானது. மகாராஷ்டிரத்தில் நேற்று பாதிப்பு 6,493 ஆக இருந்த நிலையில் இன்று 2,369 ஆக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் 1,461, டெல்லியில் 628, கர்நாடகாவில் 617, மேற்கு வங்கத்தில் 551, தெலுங்கானாவில் 477, அரியானாவில் 450, உத்தரபிரதேசத்தில் 449, குஜராத்தில் 351 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 18 ஆயிரத்து 839 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 9,486 பேர் நேற்று நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 4 கோடியே 27 லட்சத்து 97 ஆயிரத்து 92 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 96,700 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 2,220 அதிகம் ஆகும்.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 13 மரணங்கள், நேற்று மகாராஷ்டிரத்தில் 5 பேர், டெல்லி பஞ்சாபில் தலா 3 பேர், மத்தியபிரதேசம், உத்தரகாண்ட், மிசோரத்தில் தலா ஒருவர் என மேலும் 27 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,25,047 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று 19,21,811 டோஸ்களும், இதுவரை 197 கோடியே 31 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 86.14 கோடி மாதிரிகள் பரிசோ தனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 4,73,717 மாதிரிகள் அடங்கும்.

Tags:    

Similar News