இந்தியா

நிதிஷ்குமார்

ராகுல்காந்தியை தொடர்ந்து சீதாராம் யெச்சூரியுடன் நிதிஷ்குமார் சந்திப்பு

Published On 2022-09-06 08:37 GMT   |   Update On 2022-09-06 08:37 GMT
  • நிதிஷ்குமார் நேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.
  • நிதிஷ்குமார் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுகான் ஆகியோரையும் சந்திக்கிறார்.

புதுடெல்லி:

பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் 3 நாள் பயணமாக டெல்லிக்கு முதல்முறையாக சென்றார். 2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். நிதிஷ்குமார் நேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.

இதை தொடர்ந்து அவர் இன்று காலை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரியை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் டி.ராஜாவை சந்திக்கிறார். பின்னர் நிதிஷ்குமார் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுகான் ஆகியோரையும் சந்திக்கிறார்.

நிதிஷ்குமாரை கடந்த வாரம் தெலுங்கானா முதல்-மந்திரியும், டி.ஆர்.எஸ். தலைவருமான சந்திரசேகர்ராவ் சந்தித்து பேசிய பிறகு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News