இந்தியா

தொடர்ந்து 3-வது தடவையாக சமாஜ்வாடி தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு

Published On 2022-09-30 02:24 GMT   |   Update On 2022-09-30 02:24 GMT
  • சமாஜ்வாடியின் தேசிய மாநாடு லக்னோவில் நடந்தது.
  • 2017-ம் ஆண்டு முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லக்னோ :

சமாஜ்வாடி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் கடந்த 2017-ம் ஆண்டு முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு அவர் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தநிலையில், நேற்று சமாஜ்வாடியின் தேசிய மாநாடு லக்னோவில் நடந்தது. அதில், 3-வது முறையாக கட்சி தலைவராக அகிலேஷ் யாதவ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மாநாட்டில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-

அம்பேத்கரை பின்பற்றுபவர்களையும், சோஷலிஸ்டு தலைவர் லோகியாவை பின்பற்றுபவர்களையும் ஒன்றாக சேர்க்க தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

அடுத்த தடவை நாம் சந்திக்கும்போது, சமாஜ்வாடி, தேசிய கட்சியாக மாற நாம் உறுதி ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News